Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கோவிலுக்குள் பூசாரி மகளை பலாத்காரம் செய்த சிறுவன்- கட்டி வைத்து வெளுத்த இளைஞர்கள்

பூசாரி மகளை பலாத்காரம் செய்ததால் தலித் சிறுவனை நான்கு இளைஞர்கள் கட்டி வைத்து அடித்துள்ளனர். இளைஞர்களை கைது செய்த போலீசார், சிறுவனையும் போக்சோ சட்டத்தில் கைது செய்துள்ளனர்.

Subscribe to Oneindia Tamil

ஜெய்ப்பூர்: ஒரு சிறுவனின் கை கால்களை கட்டிப்போட்டு நான்கு இளைஞர்கள் காட்டுமிராண்டித்தனமாக தாக்கும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. கோவிலுக்குள் நுழைய முயன்ற சிறுவன் தாக்கப்பட்டதாக அனைவரும் சமூக வலைத்தளங்களில் கண்டனக்குரல் எழுப்பினர். ஆனால் கோவிலுக்குள் சிறுமியை பலாத்காரம் செய்ததாக அந்த சிறுவனை தாக்கியுள்ளனர். நால்வரையும் கைது செய்த போலீசார், சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் சிறுவனை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து உள்ளனர்.

வாட்ஸ்அப், ட்விட்டர், ஃபேஸ்புக் என சமூக வலைத்தளப்பங்கள் அனைத்திலும் சிறுவனை கட்டி வைத்து தாக்கும் வீடியோ வைரலானது. அவன் கதற கதற கனமான குச்சியால் அடி வெளுக்கிறது ஒரு கும்பல். இதற்கு கடுமையான கண்டனங்கள் எழுந்தன.

 Dalit boy arrested POCSO case lodged against him

ஆனால் அந்த சிறுவன் அடிவாங்கக் காரணம் அந்த சிறுவன் செய்த தகாத செயல்தான். பிஞ்சுலேயே பழுத்து வெம்பிப்போனதான் எதிரொலிதான் இப்படிப்பட்ட செயலை செய்யத் தூண்டியிருக்கிறது.

சனிக்கிழமையன்று கோவிலுக்கு போன சிறுவன் அங்கிருந்த சிறுமியிடம் தகாத முறையில் நடந்து கொண்டான். இதனையடுத்தே சிறுவனை கட்டி வைத்து அடி வெளுத்துள்ளனர். பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோர்களும், கிராம மக்களும் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். இதனையடுத்து சிறுவனை கைது செய்து சிறுவர் சீர்திருத்த பள்ளிக்கு அனுப்பி வைத்தனர். சிறுவனை தாக்கிய நால்வரையும் போலீசார் கைது செய்துள்ளனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+