டெல்லி: ரதத்தில் ஊர்வலம் வந்த தலித் மாப்பிள்ளைக்கு அடி-உதை: 2 வாலிபர்கள் கைது
டெல்லி: டெல்லியில், திருமண ஊர்வலத்தின்போது ரதத்தை பயன்படுத்தியதற்காக தலித் மாப்பிள்ளையைத் தாக்கிய இரண்டு வாலிபர்களைப் போலீசார் கைது செய்துள்ளனர்.
தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த மக்கள் திருமண ஊர்வலத்தின்போது ரதத்தை பயன்படுத்த தெற்கு டெல்லியின் மெராலி அருகே சய்துல்லாஜாப் பகுதியில் உள்ள சிலர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், அப்பகுதியில் வசித்து வரும் பொதுத் பணித்துறை ஊழியர் ஒருவரது மகளுக்கு திருமணம் நடைபெற்றது.
அப்போது திருமண ஊர்வலத்தில் மாப்பிள்ளையை ரதத்தில் அமர வைத்து ஊர்வலமாக அழைத்து வந்துள்ளனர். இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த அப்பகுதியை சேர்ந்த ராமு, சோனு என்ற இரண்டு வாலிபர்கள், ரதத்தில் அமர்ந்திருந்த மாப்பிள்ளையை அடித்து, உதைத்துள்ளனர்.
தலித்துக்கள் எப்படி ரதத்தைப் பயன் படுத்தலாம் எனக் கேட்டு அவர்கள் மாப்பிள்ளையைத் தாக்கியுள்ளனர். இது தொடர்பாக தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் பிரச்சினைக்கு காரணமான இரு வாலிபர்களையும் கைது செய்தனர். பின்னர் கோர்ட்டில் ஆஜர் படுத்தப் பட்ட அவர்கள் தற்போது நீதிமன்ற காவலில் உள்ளனர். அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆனபோதும், தலித் மாப்பிள்ளைத் தாக்கப்பட்ட இந்த சம்பத்தை அடுத்து அங்கு சண்டை மூளும் அபாயம் ஏற்பட்டது. போலீசாரின் முயற்சியால் தற்போது அங்கு நிலைமை கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications