திருமலையில் குவிந்த 3 லட்சம் பக்தர்கள்: சாமி தரிசனத்துக்கு 30 மணி நேரம்
திருமலை: திருமலையில் ஏழுமலையானை தரிசிக்க 3 லட்சம் பக்தர்கள் திரண்டதால் சுவாமி தரிசனம் செய்ய 30 மணிநேரம் பக்தர்கள் காத்திருந்தனர்.
ஏழுமலையானை தரிசிக்க நாடு முழுவதிலும் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் திருப்பதியில் குவிந்து உள்ளனர். கோடை விடுமுறை காலம் என்பதால் திருப்பதியில் கடந்த சில நாட்களாகவே பக்தர்கள் கூட்டம் அதிகமாக உள்ளது. சனி, ஞாயிறு வார விடுமுறை என்பதால் கட்டுக்கடங்காத கூட்டம் திருமலையில் காணப்பட்டது.

திரும்பிய திசையெங்கும் பக்தர்கள் வெள்ளமாக அதுவும் கால்நடையாக வரும் பக்தர்கள் எண்ணிக்கை அதிக அளவில் இருந்தது.
பிரமோற்சவ காலங்களை மிஞ்சும் வகையில் சனிக்கிழமை மட்டும் 3 லட்சம் பக்தர்கள் திருமலையில் குவிந்து இருந்தனர். ஞாயிறு காலை 3 மணி முதல் மாலை 6 மணி வரை 41,780 பக்தர்கள் ஏழுமலையானை தரிசனம் செய்தனர்.
அதன் பிறகும் தர்ம தரிசன வரிசையில் 31 கம்பார்ட்மெண்டுகளும் நிரம்பி வழிந்தது. அவர்களுக்கு தரிசனத்துக்கு 30 மணி நேரம் ஆகும் என அறிவிக்கப்பட்டது. இது தவிர கோவிலுக்கு வெளியே 3 கிலோ மீட்டர் தூரத்துக்கு பக்தர்கள் வரிசை காணப்பட்டது. அவர்களும் தரிசனத்துக்கு 44 மணி நேரம் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.
பக்தர்கள் கூட்டத்தை கருத்தில் கொண்டு கால் நடையாக வந்த பக்தர்களை வரிசையில் நிற்க அனுமதிக்கவில்லை. இதனால் ஆத்திரம் அடைந்த பக்தர்கள் ஆழ்வார் தீர்த்தம் அருகே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தேவஸ்தானத்துக்கு எதிராக கோஷமிட்டனர். கோவில் அதிகாரிகளும் போலீசாரும் அவர்களை சமரசப்படுத்தினார்கள்.
தங்கும் அறைக்கும், லக்கேஜ் வைப்பதற்கும் பக்தர்கள் பல மணி நேரம் காத்து நின்றனர். தலைமுடி காணிக்கை செலுத்த 6 மணி நேரம் வரிசையில் காத்து நிற்க வேண்டிய நிலை ஏற்பட்டது.
சில இடங்களில் தள்ளு முள்ளு ஏற்பட்டது. பக்தர்களுக்கு தேவையான வசதிகளை கோவில் அதிகாரிகள் செய்தனர்.
சனிக்கிழமை காலை பக்தர்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டதால் பிரத்யேக பிரவேச தரிசனம் நிறுத்தி வைக்கப்பட்டது. இலவச மற்றும் திவ்ய தரிசன பக்தர்கள் சுமார் 3 கிலோ மீட்டர் தூரம் வரிசையில் காத்திருந்தனர்.
இலவச தரிசனத்துக்கு சுமார் 30 மணி நேரம் ஆனது. தலைமுடி காணிக்கை செலுத்த 4 மணி நேரம் ஆனது. சனிக்கிழமை ஒரே நாளில் உண்டியல் காணிக்கையாக ரூ.2 கோடியே 3 லட்சம் கிடைத்ததாக கோவில் அதிகாரி ஒருவர் கூறினார்.
-
அமெரிக்காவை அசரடித்த அம்பானி.. ரூ.27 லட்சம் கோடி முதலீடு செய்யும் ரிலையன்ஸ்.. டிரம்ப் அறிவிப்பு -
எங்க கொண்டு போய் விட்டுடுச்சி பாருங்க.. கேஸ் தட்டுப்பாட்டால், ஸ்விக்கி, ஜொமோட்டோ டெலிவரி குறைந்தது! -
7 பொதுத்தொகுதி + 2 தனித்தொகுதி.. அதிமுக கூட்டணியில் டிடிவிக்கு ஒதுக்கப்படும் தொகுதிகள் இதுதான்! -
அமெரிக்கா இனி பிக்பாஸ் இல்லை.. நீங்க நம்பலைனாலும் அதான் நெசம்.. ஐக்கிய அரபு சகாப்தமும் வீழ்ந்தது! -
பிரேமலதாவிற்கு திமுகவின் அடுத்த ‘சர்ப்ரைஸ்'.. தேமுதிகவிற்கு தாராளம் காட்டும் ஸ்டாலின்.. காங்கிரஸ்க்கு அடி -
3 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய்யை வாங்கி குவித்த இந்திய நிறுவனங்கள்! ரஷ்யாவுக்கு கொட்டும் பண மழை! -
இந்திய கப்பலுக்கு மட்டும் வழிவிட்ட ஈரான்.. ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து மும்பை வந்தடைந்த கப்பல் -
கடலில் இறக்கப்பட்ட கண்ணி வெடி! எக்குத்தப்பாய் வந்து சிக்கிய அமெரிக்கா! வால் ஸ்ட்ரீட் ஜர்னல் வார்னிங் -
ஒருவேளை உண்மையா இருக்குமோ.. என்டிஏ கூட்டணியில் விஜய்! மாஜி அமைச்சர் கடம்பூர் ராஜூ சொன்ன வார்த்தை! -
துணை முதல்வர் எல்லாம் ஜூனியர் ஆர்ட்டிஸ்ட் வேலை.. 2.5 வருஷம் முதல்வர் பதவி.. பாஜகவிடம் விஜய் டிமாண்ட் -
தமிழகத்தில் மீண்டும் ஆட்சியை பிடிக்கும் ஸ்டாலின்! 2-வது இடம் யாருக்கு? வெளியான புதிய கருத்துக்கணிப்பு -
சிறகடிக்க ஆசை: முத்து மீனாவுக்கு நடந்த நல்ல விஷயம்! விஜயாவுக்கு இனி தான் பிரச்சனை! ரோகிணியின் அடுத்த பிளான்












Click it and Unblock the Notifications