திருமலையில் குவிந்த 3 லட்சம் பக்தர்கள்: சாமி தரிசனத்துக்கு 30 மணி நேரம்
திருமலை: திருமலையில் ஏழுமலையானை தரிசிக்க 3 லட்சம் பக்தர்கள் திரண்டதால் சுவாமி தரிசனம் செய்ய 30 மணிநேரம் பக்தர்கள் காத்திருந்தனர்.
ஏழுமலையானை தரிசிக்க நாடு முழுவதிலும் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் திருப்பதியில் குவிந்து உள்ளனர். கோடை விடுமுறை காலம் என்பதால் திருப்பதியில் கடந்த சில நாட்களாகவே பக்தர்கள் கூட்டம் அதிகமாக உள்ளது. சனி, ஞாயிறு வார விடுமுறை என்பதால் கட்டுக்கடங்காத கூட்டம் திருமலையில் காணப்பட்டது.

திரும்பிய திசையெங்கும் பக்தர்கள் வெள்ளமாக அதுவும் கால்நடையாக வரும் பக்தர்கள் எண்ணிக்கை அதிக அளவில் இருந்தது.
பிரமோற்சவ காலங்களை மிஞ்சும் வகையில் சனிக்கிழமை மட்டும் 3 லட்சம் பக்தர்கள் திருமலையில் குவிந்து இருந்தனர். ஞாயிறு காலை 3 மணி முதல் மாலை 6 மணி வரை 41,780 பக்தர்கள் ஏழுமலையானை தரிசனம் செய்தனர்.
அதன் பிறகும் தர்ம தரிசன வரிசையில் 31 கம்பார்ட்மெண்டுகளும் நிரம்பி வழிந்தது. அவர்களுக்கு தரிசனத்துக்கு 30 மணி நேரம் ஆகும் என அறிவிக்கப்பட்டது. இது தவிர கோவிலுக்கு வெளியே 3 கிலோ மீட்டர் தூரத்துக்கு பக்தர்கள் வரிசை காணப்பட்டது. அவர்களும் தரிசனத்துக்கு 44 மணி நேரம் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.
பக்தர்கள் கூட்டத்தை கருத்தில் கொண்டு கால் நடையாக வந்த பக்தர்களை வரிசையில் நிற்க அனுமதிக்கவில்லை. இதனால் ஆத்திரம் அடைந்த பக்தர்கள் ஆழ்வார் தீர்த்தம் அருகே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தேவஸ்தானத்துக்கு எதிராக கோஷமிட்டனர். கோவில் அதிகாரிகளும் போலீசாரும் அவர்களை சமரசப்படுத்தினார்கள்.
தங்கும் அறைக்கும், லக்கேஜ் வைப்பதற்கும் பக்தர்கள் பல மணி நேரம் காத்து நின்றனர். தலைமுடி காணிக்கை செலுத்த 6 மணி நேரம் வரிசையில் காத்து நிற்க வேண்டிய நிலை ஏற்பட்டது.
சில இடங்களில் தள்ளு முள்ளு ஏற்பட்டது. பக்தர்களுக்கு தேவையான வசதிகளை கோவில் அதிகாரிகள் செய்தனர்.
சனிக்கிழமை காலை பக்தர்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டதால் பிரத்யேக பிரவேச தரிசனம் நிறுத்தி வைக்கப்பட்டது. இலவச மற்றும் திவ்ய தரிசன பக்தர்கள் சுமார் 3 கிலோ மீட்டர் தூரம் வரிசையில் காத்திருந்தனர்.
இலவச தரிசனத்துக்கு சுமார் 30 மணி நேரம் ஆனது. தலைமுடி காணிக்கை செலுத்த 4 மணி நேரம் ஆனது. சனிக்கிழமை ஒரே நாளில் உண்டியல் காணிக்கையாக ரூ.2 கோடியே 3 லட்சம் கிடைத்ததாக கோவில் அதிகாரி ஒருவர் கூறினார்.
-
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
தமிழ் புத்தாண்டு ராசி பலன்: அஷ்டமசனியில் அதிர்ஷ்டத்தை அள்ளும் சிம்ம ராசி.. காதலில் வெற்றி கன்ஃபார்ம் -
சென்னையில் ரூ.36 கோடி கோடிக்கு வீடு வாங்கிய நகை கடைக்காரர்.. அதுவும் இந்த ஏரியாவில்..!! -
33 கேள்விகளுடன் ஒவ்வொரு வீட்டிற்கும்.. நேரடியாகவே வரும் அதிகாரிகள்.. நாம் என்ன செய்ய வேண்டும்? -
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
எதிர்நீச்சல் சீரியல் ராணா யார் தெரியுமா? இத்தனை படங்களில் நடித்திருக்கிறாரா? இனி தான் சம்பவமே இருக்கு -
சென்னை சென்ட்ரல் -கோவை வந்தே பாரத்... தங்க முட்டை போடும் வாத்து.. ஒப்புக்கொண்ட ரயில்வே? -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
வருமான வரி படிவம் வெளியீடு.. மாத சம்பளம் வாங்குவோர், சிறு வணிகர்கள்.. அறிய வேண்டியவை












Click it and Unblock the Notifications