தஷ்வந்த்துக்கு 3 நாள் போலீஸ் கஸ்டடி...டிச.12-இல் ஸ்ரீபெரும்பதூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தவும் உத்தரவு
போலீஸாருக்கு டிமிக்கிக் கொடுத்துவிட்டு மீண்டும் கைது செய்யப்பட்ட தஷ்வந்த்தை 5 நாள் காவலில் அனுமதிக்க தமிழக போலீஸார் மனு செய்துள்ளனர்.
Recommended Video

மும்பை : பணத்துக்காக பெற்ற தாயையே கொலை செய்த வழக்கில் மீண்டும் கைது செய்யப்பட்ட தஷ்வந்த்தை 3 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க மும்பை பாந்த்ரா நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
போரூர் அருகே முகலிவாக்கத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்த சிறுமி ஹாசினியை (7) பக்கத்து வீட்டில் வசிக்கும் சேகர்- சரளா தம்பதியின் மகன் தஷ்வந்த் பாலியல் பலாத்காரம் செய்து மிகக் கொடூரமான முறையில் பிஞ்சுக் குழந்தையை பெட்ரோல் ஊற்றி எரித்தார்.
இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட தஷ்வந்த், பின்னர் பெற்றோரின் முயற்சியால் ஜாமீனில் வெளியே வந்தார். அதன்பிறகு போதைக்கு அடிமையாகி பெற்றோரிடம் அடிக்கடி பணம் கேட்டு தகராறு செய்துள்ளார்.

25 பவுன் நகை கொள்ளை
கடந்த வாரம் தாய் சரளாவிடம் பணம் கேட்டு அவர் கொடுக்காததால் அவரது தலையில் இரும்பி கம்பியால் ஓங்கி அடித்து கொலை செய்துவிட்டு 25 பவுன் நகைகளை எடுத்துக் கொண்டு தப்பியோடிவிட்டார்.

தஷ்வந்த் கைது
சேகரின் புகாரின் பேரில் தஷ்வந்த்தை பிடிக்க தனிப்படை போலீஸார் மும்பை விரைந்தனர். அங்கு குதிரை பந்தயத்தை வேடிக்கை பார்க்க சென்ற போது மாறுவேடத்தில் இருந்த தமிழக சிறப்பு படை போலீஸார் தஷ்வந்த்தை கைது செய்தனர்.

மீண்டும் கைது
இதையடுத்து சென்னைக்கு அழைத்து செல்வதற்காக அவரை மும்பை விமான நிலையத்துக்கு அழைத்து வந்த போது சிறுநீர் கழிப்பதற்காக கழிப்பறைக்கு செல்வதாக கூறிய தஷ்வந்த் போலீஸாரை தாக்கிவிட்டு ஓட்டம் பிடித்தார். கைவிலங்கின் மேல் துணியை சுற்றிக் கொண்டு உலா வந்த தஷ்வந்த்தை போலீஸார் மீண்டும் நேற்று கைது செய்தனர்.

3 நாள்கள் போலீஸ் காவல்
இன்று மும்பை பாந்த்ரா நீதிமன்றத்தில் அவரை ஆஜர்படுத்தினர். அப்போது அவரை 5 நாள்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க தமிழக சிறப்பு படையினர் மனுதாக்கல் செய்தனர். எனினும் தஷ்வந்த்தை 3 நாட்கள் போலீஸ் கஸ்டடியில் எடுத்து விசாரிக்க உத்தரவிட்டுள்ள மும்பை நீதிமன்றம் அவரை ஸ்ரீபெரும்பூதூர் நீதிமன்றத்தில் வரும் 12-ஆம் தேதி ஆஜர்படுத்தவும் ஆணை பிறப்பித்துள்ளது.
-
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி: 5 சவரன் தங்கம் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்! எப்படி விண்ணப்பது -
பாஜகவுடன் கூட்டணி அமைக்கலாமா? 98 தவெக மாவட்டச் செயலாளர்கள் ஆதரவு.. விஜய் எடுக்கப்போகும் முடிவு! -
பாஜகவுடன் கூட்டணி வைக்கலாம்.. எழுதிக் கொடுத்த மாவட்டச் செயலாளர்கள்.. நாளை விஜய் எடுக்கும் முடிவு? -
அமெரிக்கா போட்ட தப்பு கணக்கு... ஈரான் விரித்த 'மொசைக்' வலை.. யார் இந்த முகமது அலி ஜாஃபரி? -
அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்.. வெயிட்டான பதவியை கொடுக்கும் எடப்பாடி -
தங்கம் vs ரியல் எஸ்டேட்.. கடைசி காலத்தில் நிம்மதியாக வாழ எது சிறந்தது? ஆனந்த் சீனிவாசன் ஈஸி விளக்கம் -
160+ சீட்டில் எடப்பாடி பழனிசாமி யூடர்ன்.. சீனியர் லிஸ்ட்டை கிழித்து.. உளவுத்துறை மாஜி சொன்ன சீக்ரெட் -
விரால் மீனின் ஸ்பெஷாலிட்டி இது.. பாம்பு தலையன் மீனுக்குள் அற்புதமான சீக்ரெட்! பெண்களின் வரப்பிரசாதம் -
ஜான் ஆரோக்கியசாமி போட்ட மெகா ஸ்கெட்ச்.. மிரண்டு போன பாஜக மேலிடம்.. B டீம் முத்திரையை உடைப்பாரா விஜய் -
முகத்திற்கு நேராக மம்தா சொன்ன வார்த்தை! ஆளுநர் ரவியின் சிரிப்பு அப்படியே போச்சு! முதல் நாளே சம்பவம் -
திரிஷா சர்ச்சை அடங்குவதற்குள் மீண்டும் பரபரப்பு… காதல், கள்ளக்காதல் பற்றி பார்த்திபன் ஓபனாக பேச்சு -
திமுக மாணவரணி செயலாளராக முதல்முறையாக பெண் நிர்வாகி நியமனம்.. ராஜீவ் காந்தி திடீர் மாற்றம்












Click it and Unblock the Notifications