For Daily Alerts
Just In
6 மாதத்துக்கு முன் காலமான டிஎஸ்பிக்கு ‘டிரான்ஸ்பர்’ ஆர்டர் கொடுத்த ஆந்திரா போலீஸ்
உடல்நலக் குறைவால் காலமாகிவிட்ட போலீஸ் அதிகாரிக்கு 6 மாதங்களுக்கு பின்னர் இடம் மாறுதல் ஆர்டர் கொடுத்துள்ளது ஆந்திரா போலீஸ்.
அமராவதி: 6 மாதஙக்ளுக்கு முன்னர் காலமான டி.எஸ்.பி. ராம ஆஞ்சநேயலுக்கு ஆந்திரா மாநில போலீஸ் டிரான்ஸ்பர் ஆர்டர் கொடுத்து அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
ஆந்திரா மாநில காவல்துறை வாரியமானது திங்கள்கிழமையன்று 16 டிஎஸ்பிக்களை இடம் மாற்றம் செய்தது. இதில் ராம ஆஞ்சநேயலு திருமலை ஸ்பெஷல் பிராஞ்ச் டி.எஸ்.பி.யாக இடம் மாற்றப்படுவதாக கூறப்பட்டிருந்தது.
இந்த டிரான்ஸ்பர் பட்டியலில் இருக்கும் ராம ஆஞ்சநேயலு 6 மாதங்களுக்கு முன்னர் உடல்நலக் குறைவால் காலமாகிவிட்டார். அவருக்குத்தான் இப்போது டிரான்ஸ்பர் ஆர்டர் கொடுத்திருக்கிறது ஆந்திரா போலீஸ்.
இது தொடர்பாக விசாரணைக்கு அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.
Comments
English summary
Dead senior police officer in Andhra Pradesh was transferred and asked to report to the police headquarters.
Story first published: Wednesday, December 13, 2017, 7:24 [IST]