"ஈஸ்வரப்பாவின் மனைவியை நான் பலாத்காரம் செய்தால்?" ..அறுவெறுக்க வைக்கும் தலைவர்களின் வாய்ச்சண்டை!
மங்களூர்: நான் பாஜக தலைவர் ஈஸ்வரப்பாவின் மனைவியை பலாத்காரம் செய்தால் என்ன நடக்கும் என்று மூத்த காங்கிரஸ் தலைவர் இவான் டிசோசா தெரிவித்துள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடக பாஜக தலைவர் ஈஸ்வரப்பா மாநிலத்தில் நடக்கும் பாலியல் பலாத்கார சம்பவங்கள் பற்றி கருத்து தெரிவித்தார். அப்போது அவர் கர்நாடக முதல்வர் சித்தராமையாவின் மகள் அல்லது உள்துறை அமைச்சர் கே.ஜே. ஜார்ஜின் மகளை யாராவது பாலியல் பலாத்காரம் செய்தால் அவர்கள் அமைதியாக இருப்பார்களா என்று கேட்டார்.
ஈஸ்வரப்பாவின் கருத்துக்கு கண்டனம் தெரிவிக்க காங்கிரஸ் தலைவர் இவான் டிசோசா மங்களூரில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில்,
நான் கே.எஸ். ஈஸ்வரப்பாவின் மனைவியை பாலியல் பலாத்காரம் செய்தால் என்ன நடக்கும் என்று கேட்டார்.
பெங்களூரில் கடந்த சில மாதங்களாக பள்ளிகளில் சிறுமிகள் பலாத்காரம் செய்யப்படுவது அதிகரித்து வருகிறது. இந்த விவகாரத்தை மீடியாக்கள் தான் பெரிதுபடுத்துவதாகவும், டிஆர்பி ரேட்டை ஏற்ற டிவி சேனல்களும் அந்த செய்தியையே ஒளிபரப்புவதாகவும் உள்துறை அமைச்சர் ஜார்ஜ் குற்றம்சாட்டியுள்ளார்.