ஆவியாக சுற்றும் நிர்பயாவை சீரழித்து தற்கொலை செய்த படுபாவி ராம் சிங்
டெல்லி: நிர்பயாவை பலாத்காரம் செய்து கொன்றவர்களில் ஒருவனான ராம் சிங்கின் ஆவி நடமாட்டத்தால் டெல்லியில் உள்ள சான்ட் ரவிதாஸ் முகாமில் உள்ள மக்கள் அச்சத்தில் உள்ளனர்.
கடந்த 2012ம் ஆண்டு டிசம்பர் மாதம் 16ம் தேதி டெல்லியில் ஓடும் பேருந்தில் 23 வயது பிஸியோதெரபி மாணவி நிர்பயாவை மைனர் உள்பட 6 பேர் பாலியல் பலாத்காரம் செய்து கொன்றனர். இந்த வழக்கில் அந்த 6 பேரும் கைது செய்யப்பட்டனர். அதில் திஹார் சிறையில் அடைக்கப்பட்ட ராம் சிங் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டான்.

இந்நிலையில் டெல்லியில் அவன் வசித்து வந்த சான்ட் ரவிதாஸ் முகாமில் உள்ள வீட்டுக்கு அருகே செல்ல அப்பகுதி மக்கள் அஞ்சுகிறார்கள். காரணம் அந்த வீட்டில் ராம் சிங்கின் ஆவி உலாவுவதாக அப்பகுதி மக்கள் நம்புவது தான். அதனால் அந்த வீடு கடந்த 2 ஆண்டுகளாக பூட்டியே கிடக்கின்றது.
அந்த வீட்டுக்கு அருகே செல்ல குழந்தைகள் அஞ்சுகிறார்கள். முன்னதாக பெண்கள் அந்த வீட்டின் மேல்புறத்தில் துணிகளை காய வைத்துள்ளனர். அதன் பிறகு அங்கு ஆவி அலைவதை தெரிந்து கொண்டு அந்த வீட்டுக்கு செல்வதை நிறுத்திவிட்டனர்.
ராம் சிங்கின் பெற்றோர் அந்த வீட்டை காலி செய்துவிட்டு ராஜஸ்தானில் உள்ள தங்களின் சொந்த ஊருக்கு கிளம்பினர். அந்த வீட்டில் ஆவி இருப்பதால் தான் அவர்கள் ராஜஸ்தானுக்கு சென்றுவிட்டனர் என்ற பேச்சு கிளம்பியது.












Click it and Unblock the Notifications