தீபிகாவின் "கிளீவேஜை எக்ஸ்போஸ்" செய்த மீடியாவை நாங்கள் "எக்ஸ்போஸ்" செய்வோம்.. கெஜ்ரிவால் அதிரடி!
டெல்லி: நடிகை தீபிகா படுகோன் தொடர்பான விவகாரத்தில் அவருக்கு ஆம் ஆத்மி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் ஆதரவுக் குரல் கொடுத்துள்ளார்.
ஊழலுக்கு எதிராக குரல் கொடுத்து வந்த கெஜ்ரிவால் தற்போது தீபிகா படுகோன் கிளீவேஜ் பிரச்சினை தொடர்பாக குரல் கொடுத்திருப்பது பலரை ஆச்சரியப்படுத்தியுள்ளது.
சமீபத்தில் டைம்ஸ் ஆப் இந்தியாவின் இணையதளத்தில் தீபிகாவின் மார்பக கிளீவேஜுடன் கூடிய படத்தைப் போட்டு பரபரப்பை ஏற்படுத்தியிருந்தனர். இதனால் கோபமடைந்தார் தீபிகா. கடுமையான வாசகங்களுடன் கூடிய கண்டனத்தையும் அவர் வெளியிட்டிருந்தார்.
தீபிகா விவகாரத்தில் பாலிவுட் நடிகர், நடிகையர் பலரும் அவருக்கு ஆதரவாக குரல் கொடுத்தனர். பதிலுக்கு டைம்ஸ் ஆப் இந்தியாவும் சிலகேள்விகளை தீபிகாவிடம் கேட்டு வந்தது. இந்த நிலையில் கெஜ்ரிவால், தீபிகாவுக்கு ஆதரவாக குரல் கொடுத்துள்ளார்.
டுவிட்டரில்...
இதுதொடர்பாக அவர் டிவிட்டரில் வெளியிட்டுள்ள செய்தியில், அவர்கள் அனைவரும் ஒன்றாக சேர்ந்து விட்டனர்.
தவறான எக்ஸ்போஸ்...
அனைவரும் ஒன்று சேர்ந்து தீபிகாஜி, சோனம் ஜி, கரீனா ஜீ ஆகியோரை எக்ஸ்போஸ் செய்து வருகின்றனர். இதற்கெல்லாம் அவர்களுக்கு நிறைய நேரம் கிடைக்கிறது.
இதுக்கு நேரமில்லை...
ஆனால் கத்காரிஜி, பவார்ஜி ஆகியோரைப் பற்றி செய்தி போடத்தான் நேரம் இல்லை, இடம் இல்லை.
இரட்டை நிலை...
இந்த முறை அவர்களை நானும், தீபிகாவும் சேர்ந்து மக்களிடம் அம்பலப்படுத்துவோம். அவர்களின் இரட்டை நிலையை வெளிச்சத்திற்குக் கொண்டு வருவோம்.
பெரிய ஊழல் தான்...
எப்படி இந்த மீடியா நிறுவனங்கள் தங்களது வாசகர்களை ஏமாற்றி மோசடி செய்கின்றன என்பதை படம் போட்டுக் காட்டுவோம். இதுவும் கூட மிகப் பெரிய ஊழல்தான் என்று கூறியுள்ளார் கெஜ்ரிவால்.
ஆதரவு...
ஆம் ஆத்மி கட்சியின் சைபர் பிரிவு தலைவரான திலீப் பாண்டேவும் கூட தீபிகாவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். அவர் விடுத்துள்ள செய்தியில், நாங்கள் பைன்டிங் பான்னி படத்தின் போஸ்டர்களுடன் தீபிகாவுக்கு ஆதரவு தெரிவித்து செய்தியாளர் கூட்டத்தை நடத்தவுள்ளோம். அப்போது தீபிகாவுக்கு எங்களது ஆதரவைத் தெரிவிப்போம் என இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்..