ஆம் ஆத்மி உட்கட்சி மோதல் வலி நிறைந்ததாக உள்ளது: அரவிந்த் கேஜ்ரிவால்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: ஆம் ஆத்மி கட்சிக்குள் நடக்கும் மோதல்கள் வலி நிறைந்ததாக இருக்கிறது என்று டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் கவலை தெரிவித்துள்ளார்.

டெல்லி சட்டசபைக்கு நடந்த தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி அமோக வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது. அந்த கட்சியின் அமைப்பாளரான அரவிந்த் கேஜ்ரிவால் முதல்வராகப் பதவி ஏற்று உள்ளார்.

Deeply hurt by what is going in the party: Kejriwal

இந்தநிலையில் ஆம் ஆத்மி கட்சியில் மூத்த தலைவர்களுக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு உள்ளது. கேஜ்ரிவாலுக்கு எதிராக மூத்த தலைவர்களான பிரசாந்த் பூஷணும், யோகேந்திர யாதவும் போர்க்கொடி உயர்த்தி இருக்கிறார்கள். இதற்கு கட்சியில் எதிர்ப்பு கிளம்பி இருக்கிறது.

கடந்த வாரம் தேசிய செயற்குழு கூட்டம் நடைபெற்ற போது, கேஜ்ரிவால் கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளர் பதவியை ராஜினாமா செய்ய முன்வந்தார். ஆனால் அதற்கு எதிர்ப்பு தெரிவித்த செயற்குழு உறுப்பினர்கள், அவரே அந்த பதவியில் நீடிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டனர்.

கட்சியின் தலைமைப் பொறுப்பில் கெஜ்ரிவால் நீடிப்பார். அவரை நீக்குவது என்ற கேள்விக்கே இடம் இல்லை என்று ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான சஞ்சய் சிங் தெரிவித்தார்.

இந்நிலையில் கட்சிக்குள் தற்போது நடைபெறும் சம்பங்கள் காயம் மற்றும் வலியை ஏற்படுத்த செய்துள்ளது என்று ஆம் ஆத்மி கட்சியின் தலைவர் அரவிந்த் கேஜ்ரிவால் தெரிவித்து உள்ளார். இது டெல்லி மக்கள் நமது மீது வைத்திருக்கும் நம்பிக்கைக்கு புறம்பானதாக உள்ளது என்றும் கேஜ்ரிவால் தமது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்து உள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+