ஆம் ஆத்மி உட்கட்சி மோதல் வலி நிறைந்ததாக உள்ளது: அரவிந்த் கேஜ்ரிவால்
டெல்லி: ஆம் ஆத்மி கட்சிக்குள் நடக்கும் மோதல்கள் வலி நிறைந்ததாக இருக்கிறது என்று டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் கவலை தெரிவித்துள்ளார்.
டெல்லி சட்டசபைக்கு நடந்த தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி அமோக வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது. அந்த கட்சியின் அமைப்பாளரான அரவிந்த் கேஜ்ரிவால் முதல்வராகப் பதவி ஏற்று உள்ளார்.

இந்தநிலையில் ஆம் ஆத்மி கட்சியில் மூத்த தலைவர்களுக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு உள்ளது. கேஜ்ரிவாலுக்கு எதிராக மூத்த தலைவர்களான பிரசாந்த் பூஷணும், யோகேந்திர யாதவும் போர்க்கொடி உயர்த்தி இருக்கிறார்கள். இதற்கு கட்சியில் எதிர்ப்பு கிளம்பி இருக்கிறது.
I am deeply hurt and pained by what is going on in the party. This is betrayal of trust that Delhi posed in us(1/2)
— Arvind Kejriwal (@ArvindKejriwal) March 3, 2015 கடந்த வாரம் தேசிய செயற்குழு கூட்டம் நடைபெற்ற போது, கேஜ்ரிவால் கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளர் பதவியை ராஜினாமா செய்ய முன்வந்தார். ஆனால் அதற்கு எதிர்ப்பு தெரிவித்த செயற்குழு உறுப்பினர்கள், அவரே அந்த பதவியில் நீடிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டனர்.
கட்சியின் தலைமைப் பொறுப்பில் கெஜ்ரிவால் நீடிப்பார். அவரை நீக்குவது என்ற கேள்விக்கே இடம் இல்லை என்று ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான சஞ்சய் சிங் தெரிவித்தார்.
இந்நிலையில் கட்சிக்குள் தற்போது நடைபெறும் சம்பங்கள் காயம் மற்றும் வலியை ஏற்படுத்த செய்துள்ளது என்று ஆம் ஆத்மி கட்சியின் தலைவர் அரவிந்த் கேஜ்ரிவால் தெரிவித்து உள்ளார். இது டெல்லி மக்கள் நமது மீது வைத்திருக்கும் நம்பிக்கைக்கு புறம்பானதாக உள்ளது என்றும் கேஜ்ரிவால் தமது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்து உள்ளார்.
-
விஜய்க்கு எதிராக பெரம்பூர், திருச்சியில் கிழக்கில்.. களமிறங்கும் திமுக, அதிமுக வேட்பாளர்கள் யார்? -
Bose Venkat: சீட் தராததால் கட்சி மாறுகிறேனா? நான் திமிர்பிடித்த திமுககாரன்! போஸ் வெங்கட் பொளேர்! -
அரசியலன்னா இதுதான்.. எப்போ என்ன நடக்கும்னே தெரியாது.. ஸ்டாலின் டிக் அடித்த பெயர்.. பலர் ஷாக் -
இதுவரை திமுக ஜெயிக்காத.. கோவை தெற்கு தொகுதியைத் கேட்டு வாங்கிய செந்தில் பாலாஜி.. என்ன காரணம்? -
916 KDM நகை வாங்குவோர் கவனத்திற்கு.. ஒரு சவரன் தங்கம் எடுக்கும்போதே நஷ்டமா? பலர் செய்யும் பெரிய தவறு -
அழகே அழகு அப்டேட்: திமிரா பேசிய சுரேஷுக்கு சரியான பதிலடி கொடுத்த அழகுமதி.. ஒன்று சேர்ந்த குடும்பம் -
ஜெயலலிதா ஸ்டைலை பின்பற்றும் விஜய்! ‘டபுள் தொகுதி’ ஃபார்முலாவை கையில் எடுத்தது ஏன்? இதுவரை யார் யார்? -
திமுக தேர்தல் அறிக்கை LIVE: மகளிர் உரிமை தொகை, புதுமைப்பெண், தமிழ்ப்புதல்வன் தொகை உயர்வு! -
மத்தி, சென்னையை கிளீன் ஸ்வீப் செய்யும் திமுக! தெற்கு, வடக்கில் ட்விஸ்ட்! அப்போ அரியணை? வெளியான சர்வே -
சிக்சர் அடித்த ஸ்டாலின்.. இந்தியாவிலேயே முதன்முறை! பெண்களுக்காக ஸ்டாலின் கொண்டு வரும் மெகா திட்டம்! -
விஜய்க்கு சத்தமின்றி எடப்பாடி வைத்த செக்.. சம்பவம் பண்ணிட்டாரே.. ஸ்டாலினும் விடலையே.. கேம் ஓவர்? -
பெரம்பூர், திருச்சி கிழக்கு தொகுதிகளில் சி. ஜோசப் விஜய்.. 2 தொகுதிகளில் போட்டியிடும் தவெக தலைவர்!












Click it and Unblock the Notifications