முப்படையிலும் பிரச்சனை... அந்தோணி தனது ராஜினாமா செய்ய வேண்டும்: பா.ஜ.க

நேற்று மும்பை அருகே இந்திய கடற்படைக்கு சொந்தமான ‘ஐ.என்.எஸ். சிந்து ரத்னா' என்ற நீர் மூழ்கி போர்க்கப்பலில் ‘திடீர்' தீ விபத்து உண்டானது. இந்த தீ விபத்தில் சிக்கிய 7 கடற்படை வீரர்கள் உடல்நிலை பாதுக்கப்பட்டு மும்பை கடற்படை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும், இந்த விபத்தின்போது மாயமானதாக தேடப்பட்டு வந்த இரு அதிகாரிகள் உயிரிழந்துவிட்டதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே, ‘ஐ.என்.எஸ். சிந்து ரத்னா' நீர் மூழ்கிக்கப்பல் தீ விபத்துக்கு தார்மீகப் பொறுப்பேற்று, கடற்படை தளபதி அட்மிரல் டி.கே.ஜோஷி நேற்று தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
கடற்படை தளபதியாக டி.கே.ஜோஷி பதவி ஏற்ற கடந்த 7 மாதங்களில் இந்திய கடற்படை போர்க்கப்பல்களில் கிட்டத்தட்ட 10 அசம்பாவித சம்பவங்கள் நடந்துள்ளன. அதில் மிகப்பெரிய விபத்து, கடந்தாண்டு ஆகஸ்ட் மாதம் 14ம் தேதி மும்பை துறைமுகத்தில் நடந்தது ஆகும். அந்த விபத்தில் ‘ஐ.என்.எஸ். சிந்துரக்ஷாக்' என்ற போர்க்கப்பல், கடலில் மூழ்கி விபத்துக்குள்ளானதில் 18 அதிகாரிகள் மற்றும் வீரர்கள் பலியானார்கள்.
ஜோஷியின் ராஜினாமாவைத் தொடர்ந்து, பாதுகாப்புத் துறை அமைச்சர் அந்தோணியும் தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என பாஜக மூத்தத் தலைவர் ஜஸ்வந்த் சிங் வலியுறுத்தியுள்ளார்.
முப்படைகளிலும் நிலவி வரும் பிரச்சினைகளுக்கு பொறுப்பேற்று அந்தோணி தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.
-
விஜய்யை என்டிஏ கூட்டணிக்கு அழைத்த பாஜக நிர்வாகியின் பதவி பறிப்பு.. நயினார் நாகேந்திரன் அதிரடி -
90, 60, 55, 25: தமிழகத்தின் அடுத்த முதல்வர் இவர்தான்? 2 துணை முதல்வர்கள் யார்? பலே பாஜக.. அப்ப விஜய் -
அதிமுக கூட்டணியில் தவெக விஜய்? மத்திய அமைச்சர் எல்.முருகன் சொன்ன பதிலால் பரபரப்பு! -
பாஜக - தவெக கூட்டணி உருவாகிறதா? திமுகவை வீழ்த்த பம்பர் ஆஃபர் 60 சீட், மெகா பொறுப்பு? டெல்லி பலே மூவ் -
கருணாஸ் பாஜகவுக்கு விட்ட சவால்.. "இந்து மதமே கிடையாது" அதிர்ச்சியில் உறைந்த இந்து முன்னணி! -
"இந்த" 2 பேருக்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன்.. டி20 உலக கோப்பை வெற்றிக்கு பின் கம்பீர் சொன்ன வார்த்தை -
உஷரய்யா உஷாரு.. பீகாரை வைத்து தமிழ்நாட்டில் பாஜக போடும் கணக்கு! எடப்பாடிக்கு எகிறும் பிரஷர்! -
வார்த்தைகளே பத்தலை.. தமிழ்நாட்டை விட்டு போறதை நினைக்கும் போது! 3 பக்க கடிதம் எழுதிய ஆர்.என்.ரவி -
படிச்சு படிச்சு சொன்னோமே சண்டை வேணாம்னு! இப்போ பொணத்தைக் கூட எரிக்க முடியல! இப்படி ஒரு சிக்கலா? -
ரூ 30,00,00,00,00,000 கோடி பஸ்பம்.. கதறும் இந்திய முதலீட்டாளர்கள்.. ஒவ்வொரு நாளும் மரண அடி -
ஒரே நாளில் ரூ.17 லட்சம் உயர்ந்த பரிசு தொகை! இந்திய டீமுக்கு ஜாக்பாட்! எல்லாத்துக்கும் காரணம் டிரம்ப் -
இஸ்ரேலால் இந்திய அடுப்புகளுக்கு ஆப்பு? கேஸ் சிலிண்டர் விலை உயர்வு வெறும் டிரைலர் தானா? என்னாகும்?












Click it and Unblock the Notifications