ரபேல் விமான ஒப்பந்தத்தில் எந்த முறைகேடும் நடக்கவில்லை.. நிர்மலா விளக்கம்!
ரபேல் விமான ஒப்பந்தத்தில் எந்த முறைகேடும் நடக்கவில்லை என்று பாதுகாப்பு துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் விளக்கம் அளித்துள்ளார்.
டெல்லி: ரபேல் விமான ஒப்பந்தத்தில் எந்த முறைகேடும் நடக்கவில்லை என்று பாதுகாப்பு துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் விளக்கம் அளித்துள்ளார்.
காங்கிரஸ் ஆட்சியில் இருந்த போதே இந்த விமானம் வாங்க பிரான்ஸ் நிறுவனத்திடம் ஒப்பந்தம் போடப்பட்டது. ஆனாலும் எல்லாப் பேச்சு வார்த்தையும் முடிந்தும் ஒப்பந்தம் மட்டும் கையெழுத்தாகாமல் இருந்தது. கிட்டத்தட்ட 4 வருடங்கள் இந்த ஒப்பந்தம் இழுத்தடிக்கப்பட்டு பாஜக ஆட்சியில் வெற்றிகரமாகக் கையெழுத்து ஆனது.

இந்த நிலையில் ரபேல் விமான ஒப்பந்தத்தில் ஊழல் நடந்துள்ளது என்று ராகுல் காந்தி குற்றச்சாட்டு வைத்து இருக்கிறார். பாஜக கட்சி இதில் உண்மைகளை மறைப்பதாக அவர் குறிப்பிட்டு இருந்தார்.
இந்த நிலையில் தொடர் புகார்களுக்கு தற்போது மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் பதில் அளித்துள்ளார். அதன்படி ரபேல் விமான ஒப்பந்தம் குறித்து விளக்கம் அளித்துள்ளார்.
அதில், காங்கிரஸ் ஒப்பந்தம் செய்த விலையை விட குறைவான விலையிலேயே விமானம் வாங்கினோம். நடைமுறைபடியே ஒப்பந்தம் நடந்து இருக்கிறது. காங்கிரஸ் நிர்ணயித்த விதியின்படியே ஒப்பந்தம் செய்யப்பட்டது.
அவர்கள் நிர்ணயித்த விதியை பின்பற்றினால் எப்படி ஊழல் என்று அவர்களே கூறுகிறார்கள். காங்கிரஸ் கூட்டணி அரசை விட பாஜக 9 சதவிகிதம் குறைவான விலையில் விமானம் வாங்கியுள்ளது. காங்கிரஸ் ஆட்சியில் முழுமையான ஒப்பந்தம் செய்யப்படவில்லை.
ரபேல் தயாரிப்பில் இருந்து எச்ஏஎல்லை கைவிட்டது காங்கிரஸ்தான். அதன்பின்தான் பாஜக ஆட்சியில் ரபேல் ஒப்பந்தம் தனியாக நடந்தது.
விமான படையில் ஒரு ஸ்குவாட்டரானுக்கு 33 ஆக விமான எண்ணிக்கை 2013லேயே குறைந்துவிட்டது. இந்திய விமான படைக்கு உடனடியாக விமானம் வாங்க வேண்டிய அவசர நிலை ஏற்பட்டுள்ளது. இதனால்தான் ரபேல் ஒப்பந்தம் அவசரமாக நடந்தது என்றுள்ளார் நிர்மலா சீதாராமன்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications