டெல்லியில் தெருநாய்களுக்கு பயந்து புதரில் ஒளிந்த சிறுமியை சீரழித்த சிறுவன்
டெல்லி: டெல்லியில் தெரு நாய்களுக்கு பயந்து புதர் அருகே ஒளிந்த 15 வயது சிறுமி மைனரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார்.
கிழக்கு டெல்லியில் உள்ள சசி கார்டன் பகுதியைச் சேர்ந்த 15 வயது சிறுமி கடந்த வெள்ளிக்கிழமை மாலை மளிகை கடைக்கு சென்றுள்ளார். கடையில் பொருட்கள் வாங்கிவிட்டு வீடு திரும்புகையில் வழியில் தெரு நாய் கூட்டத்தை பார்த்து அவர் அஞ்சியுள்ளார்.

இதையடுத்து அவர் அங்கு உள்ள கோவிலுக்கு பின்னால் உள்ள புதரில் ஒளிந்து கொண்டார். அப்போது சிறுவன் ஒருவர் அவரை அணுகி தனது குடிசையில் வந்து ஒளிந்து கொள்ளுமாறு அழைக்க அவர் மறுத்துள்ளார்.
இதையடுத்து சிறுவன் அந்த சிறுமியை தனது குடிசைக்குள் இழுத்துச் சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதை யாரிடமும் கூறக் கூடாது என்று மிரட்டி அவர் சிறுமியை அனுப்பி வைத்துள்ளார்.
வீட்டிற்கு சென்றதும் சிறுமி தனக்கு நடந்த கொடுமை பற்றி தாயிடம் தெரிவித்துள்ளார். அவர் உடனே இது குறித்து போலீசில் புகார் அளித்தார். அவரின் புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் சிறுவனை கைது செய்தனர்.
சிறுவன் போதைப் பொருளுக்கு அடிமையாகி குடிசைப் பகுதியில் தொடர்ந்து பிரச்சனை செய்து வந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications