மனைவி இறந்தது தெரியாமல் சடலத்துடன் 5 நாட்கள் வாழ்ந்த 90 வயது முதியவர்
டெல்லி: தனது மனைவி இறந்தது தெரியாமல், அந்த சடலத்துடன் 5 நாட்கள் குடும்பம் நடத்தியுள்ளார் அவரது 90 வயது கணவன்.
டெல்லியில் உள்ள கல்காஜி பகுதியில் வசித்து வருபவர் கோவிந்த் ராம். வயது 90. இவரது மனைவி கோபி(85). கோவிந்த் ராம் தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து ஓய்வு பெற்றார். பின்னர், அந்த பென்சன் தொகையையும், தபால் அலுவலகத்தில் வைத்திருந்த சேமிப்பிலும், கிடைத்த சொற்ப பணத்தை கொண்டும் மனைவியுடன் வாழ்ந்து வந்தார். இவர்களுக்கு குழந்தைகள் கிடையாது.

இந்த நிலையில் சில நாட்களுக்கு முன்பு கோபி இறந்துவிட்டார். இதை கண்டுபிடிக்க தெரியாத முதியவர் பக்கத்து வீட்டுக்காரரை அழைத்து வந்துள்ளார். அவர் வீட்டுக்குள் நுழையும் போதே வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசியது. அதன்பின், கோபி சடலத்தைப் பார்த்து விட்டு போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், அங்கு அழுகிய நிலையில் கோபியின் சடலம் கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். போதிய ஊட்டச்சத்து பற்றாகுறை காரணமாக கோவிந்த் ராமும் உடல் நலம் பாதிக்கப்பட்ட நிலையில் இருந்தார். மேலும் மனைவி இறந்து விட்டரா அல்லது உயிருடன் இருக்கிறாரா என்பது தெரியாத அளவுக்கு மனநலமும் பாதிக்கப்பட்டிருந்தார். அவரை மீட்டு சப்தர்ஜங் மருத்துவமனையில் போலீசார் அனுமதித்தனர்.
கோவிந்த் ராம் வாக்குமூலத்தின் படி, மனைவி சில தினங்களுக்கு முன் கட்டிலில் படுத்துக் கொண்டிருந்த பொழுது தவறி கீழே விழுந்து விட்டார். அதன் பின் அவர் உடலில் எந்த அசைவும் இல்லை என தெரிவித்தார்" என போலீஸார் கூறினர்.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications