ரூபாய் நோட்டு செல்லாது என்ற அறிவிப்பு டெல்லி சட்டசபை கடும் எதிர்ப்பு- வாபஸ் பெற கோரி தீர்மானம்!
மத்திய அரசின் ரூபாய் நோட்டு செல்லாது அறிவிப்பு டெல்லி சட்டசபை எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
டெல்லி: 500, 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்புக்கு டெல்லி சட்டசபை கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இது தொடர்பான அறிவிப்பை திரும்பப் பெற மத்திய அரசுக்கு ஜனாதிபதி உத்தரவிட வேண்டும் என்றும் டெல்லி சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பால் நாடு முழுவதும் பொதுமக்கள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர். கடந்த 1 வார காலமாக மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

இந்த விவகாரம் குறித்து விவாதிக்க டெல்லி மாநில சட்டசபை சிறப்புக் கூட்டம் இன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் பேசிய முதல்வர் கேஜ்ரிவால், மத்திய அரசின் நடவடிக்கைக்கு கடும் கண்டனம் தெரிவித்தார்.
பின்னர் ரூபாய் நோட்டு செல்லாது என்ற அறிவிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்தும் இந்த அறிவிப்பை திரும்பப் பெற மத்திய அரசுக்கு ஜனாதிபதி உத்தரவிட கோரியும் டெல்லி சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.












Click it and Unblock the Notifications