Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மாங்கல்ய தோஷத்தை கழிப்பதற்காக புராரி குடும்பம் நடத்திய மரண வேள்வி... போலீஸ் விசாரணையில் புது தகவல்

டெல்லி புராரி வழக்கில் இறந்த பெண்ணுக்கு மாங்கல்ய தோஷம் இருந்ததால் அதை கழிப்பதற்காக இந்த தூக்கு சம்பவம் நடைபெற்றதா என போலீஸ் சந்தேகம்.

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    மாங்கல்ய தோஷத்திற்காக செய்த மரண வேள்வி நடத்திய புராரி குடும்பம்- வீடியோ

    டெல்லி: புராரி வழக்கில் இறந்த பிரியங்காவுக்கு மாங்கல்ய தோஷம் இருந்ததால் திருமணம் தடையானது. இதை கழிப்பதற்காக புராரி குடும்பம் மரண வேள்வி நடத்தியதாக போலீஸார் விசாரணையில் தெரியவந்துள்ளது..

    டெல்லியில் புராரியில் ஒரு இரட்டை அடுக்குமாடி குடியிருப்பில் கடந்த 10 நாட்களுக்கு முன்பு 11 பேர் தூக்கில் தொங்கிய நிலையில் இறந்து கிடந்தனர். இதுகுறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்த சம்பவம் குறித்து ஒரு முடிவுக்கு வரமுடியாமல் போலீஸார் தவிக்கின்றனர்.

    சமையலறையில்

    சமையலறையில்

    வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில் ஒரு டைரியில் சில குறிப்புகள் இருந்தன. அதிலிருந்து இந்த சம்பவம் தூக்கிட்டு தற்கொலை என்ற முடிவுக்கு வந்துவிட்டனர். எனினும் வீட்டு சமையலறையில் போலீஸார் சோதனை நடத்திய போது மறுநாள் காலை சிற்றுண்டி செய்வதற்காக கடலை பருப்பு நீரில் ஊற வைக்கப்பட்டிருந்தது.

    முகாந்திரம் இல்லை

    முகாந்திரம் இல்லை

    பாலை தயிராக்கும் விதமாக பெர்மன்டேஷனுக்காக ஒரு பாத்திரத்தில் வைக்கப்பட்டிருந்தது. மேலும் வீட்டில் இந்த ஆண்டு இறுதியில் ஒரு திருமணம் நடைபெறவுள்ளது. இதனால் வீட்டினர் மகிழ்ச்சியாக உள்ளனர். இதை வைத்து பார்க்கும் அந்த குடும்பத்தினர் தற்கொலை செய்வதற்கான முகாந்திரம் இல்லை என்றும் போலீஸார் நம்புகின்றனர்.

    மகன்தான் காரணம்

    மகன்தான் காரணம்

    மேலும் அமானுஷ்ய கடிதத்தின்படி நாராயணி தேவியின் மகன் லலித்தான் இந்த தற்கொலைக்கு காரணம் என்று கூறப்படுகிறது. அவருக்கு அமானுஷ்யங்களின் மேல் நம்பிக்கை உள்ளது என்றும் அவர்தான் மீதமுள்ள 10 பேரையும் மூளைச்சலவை செய்து தற்கொலைக்கு தூண்டியிருப்பார் என்று தெரிகிறது.

    தெரியவில்லை

    தெரியவில்லை

    இந்நிலையில் நாராயணியின் பேத்தி பிரியங்கா திருமணம் செய்து கொள்ளவிருந்த மாப்பிள்ளையிடம் போலீஸார் துருவி துருவி 3 மணி நேரம் விசாரணை நடத்தினர். பெண் வீட்டாருக்கு அமானுஷ்யங்களில் நம்பிக்கை இருப்பதாக தனக்கு தெரியவில்லை என்றார்.

    மாங்கல்ய தோஷம்

    மாங்கல்ய தோஷம்

    பிரியங்காவுக்கு மாங்கல்ய தோஷம் இருப்பதால்தான் திருமணம் நடைபெற காலதாமதம் ஆனதாக கூறப்படுகிறது. எனவே தோஷம் கழிப்பதற்காக இந்த மாஸ் தற்கொலையில் ஈடுபட்டிருக்கலாம் என்ற தகவல் போலீஸாருக்கு கிடைத்துள்ளது. திருமணம் கைகூடி விட்ட நிலையில் இதை ஏன் செய்தனர் என்ற குழப்பமும் நிலவுகிறது.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+