'அப்படி' நான் சொன்னதற்கு 'சாரி': டெல்லி போலீசாரிடம் மன்னிப்பு கேட்ட கெஜ்ரிவால்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: ஏழைகளை மிரட்டி பணம் பறிக்கும் போலீஸ்காரர்களை குறிக்கவே துல்லா என்ற வார்த்தை பயன்படுத்தினேன். என் வார்த்தை நேர்மையான போலீஸ்காரர்களை துன்புறுத்தியிருந்தால் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன் என்று டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.

டெல்லியில் ஏழைகள் மற்றும் சாலையோரங்களில் வியாபாரம் செய்பவர்களை துன்புறுத்தி மிரட்டி பணம் பறிக்கும் போலீஸ்காரர்களை துல்லா என்று முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்திருந்தார். துல்லா என்றால் ஊழல் போலீஸ்காரர்கள் என்று அர்த்தம்.

Delhi Chief Minister Arvind Kejriwal Apologises for 'Thulla' Remark

கெஜ்ரிவால் போலீஸ்காரர்களை துல்லா என்று அழைத்ததால் அவர்கள் ஆத்திரம் அடைந்தனர். சில போலீசார் கெஜ்ரிவால் மீது காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். ஒரு போலீஸ்காரர் கெஜ்ரிவால் மீது டெல்லி உயர் நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடர்ந்தார்.

இந்நிலையில் இது குறித்து கெஜ்ரிவால் கூறுகையில்,

நான் ஏழை மக்களை துன்புறுத்தி பணம் பறிக்கும் போலீசாரைத் தான் துல்லா என்றேன். அதனால் நேர்மையான போலீசார் வருத்தம் அடைந்திருந்தால் அதற்காக நான் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். பிரதமர் நரேந்திர மோடி டெல்லி அரசை ஒழுங்காக செயல்படவிடாமல் தடுக்கிறார் என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+