ஜனலோக்பாலுக்கு காங். ஆதரவு தரவில்லையென்றால் ராஜினாமா: கெஜ்ரிவால்
டெல்லி: ஜனலோக்பால் மசோதாவுக்கு காங்கிரஸ் ஆதரவு தரவில்லையென்றால் தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்யப் போவதாக மிரட்டியுள்ளார் ஆம் ஆத்மி கட்சித் தலைவரும், டெல்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால்.
நடந்து முடிந்த டெல்லி சட்டசபை தேர்தலின்போது, முதல்வர் முதல் அடிமட்ட ஊழியர் வரை யார் ஊழல் செய்தாலும், அவர்களுக்கு ஆயுள்தண்டனை வரை விதிக்க வகைசெய்யும் ஜனலோக்பால் சட்டத்தைக் கொண்டு வருவதாக ஆம் ஆத்மி வாக்குறுதி அளித்தது.

அதன்படி, முதல்வராக பதவியேற்ற அக்கட்சியின் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் நடவடிக்கை எடுத்து வருகிறார். இது தொடர்பான மசோதாவுக்கு டெல்லி அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. ஆனால், இந்த மசோதாவின் வரைவு அறிக்கையை கசிய விட்டதாகக் கூறி டெல்லி துணை நிலை கவர்னர் நஜீப் ஜங்குடன் கெஜ்ரிவால் மோதல் போக்கை கடைப்பிடிக்கத் தொடங்கினார்.
டெல்லி மாநில அரசின் மசோதாவுக்கு எதிராக காங்கிரசும், பாரதீய ஜனதாவும் போர்க்கொடி உயர்த்தின. அதனை தொடர்ந்து, ‘ஊழல் என்பது மிகவும் முக்கியமான பிரச்சினை. ஜனலோக்பால் மசோதாவை நிறைவேற்றுவதற்காக எந்த எல்லைக்கும் போவேன்'' எனத் தெரிவித்தார் கெஜ்ரிவால்.
இந்நிலையில், தற்போது "காங்கிரஸ் கட்சி ஜன்லோக்பால் மசோதாவை தாக்கல் செய்ய ஆதரவு கொடுக்கவில்லை என்றால் தனது பதவியை ராஜினாமா செய்ய போவதாகவும், டெல்லி அரசு கவிழும் எனவும் எச்சரித்துள்ளார் கெஜ்ரிவால்.












Click it and Unblock the Notifications