டெல்லி விவசாயிகள் போராட்டம்: பத்திரிகையாளர்களை நசுக்குகிறதா அரசு? - குவியும் வழக்குகள்
இந்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களை எதிர்த்து இரண்டு மாதங்களுக்கும் மேலாக விவசாயிகள் தலைநகர் டெல்லியின் எல்லைப்பகுதிகளில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.
இதுதொடர்பாக, செய்தி வெளியிட்டு வரும் ஊடகவியலாளர்கள் மீது, அரசு தொடர்ந்து வழக்கு தொடர்வது என்பது தொடர்கதையாகி வருகிறது. அதற்கு மிக சமீபத்திய உதாரணம், மன்தீப் பூனியா என்கிற சுயாதீனப் பத்திரிகையாளர் மீது வழக்கு தொடுக்கப்பட்டிருப்பதுதான்.
மன்தீப் கடந்த சனிக்கிழமை இரவு சிங்கு எல்லையில், காவலர்களின் பணியைச் செய்யவிடாமல் இடையூறு விளைவித்ததாகக் கூறி கைது செய்யப்பட்டார். அதோடு நீதிபதிக்கு முன் ஆஜர்படுத்தப்பட்டு 14 நாட்கள் நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டிருப்பதாக அவரது வழக்குரைஞர் கூறியுள்ளார்.
கடந்த ஜனவரி 26ஆம் தேதி விவசாயிகளின் டிராக்டர் பேரணிக்குப் பிறகு, டெல்லி மற்றும் உத்தர பிரதேச காவல்துறையினர் பல்வேறு ஊடகவியலாளர்கள் மீது பல குற்றவியல் வழக்குகளைப் பதிவு செய்துள்ளனர்.
இந்தியா டுடேவைச் சேர்ந்த ராஜ்தீப் சர்தேசாய், நேஷ்னல் ஹெரால்ட் பத்திரிகையின் மூத்த ஆலோசகர் மிருனல் பாண்டே, க்வாமி ஆவாஸ் பத்திரிகையின் ஆசிரியர் ஜாஃபர் ஆகா, தி கேரவன் பத்திரிகையின் நிறுவனர் மற்றும் ஆசிரியர் பரேஷ் நாத், தி கேரவன் பத்திரிகையின் ஆசிரியர் ஆனந்த் நாத் மற்றும் செயல் ஆசிரியர் வினோத் ஆகியோருக்கு எதிராக, உத்தர பிரதேச காவல்துறை கடந்த வியாழக்கிழமை தேசத் துரோக வழக்கைப் பதிவு செய்திருக்கிறது.
மேலே குறிப்பிடப்பட்டவர்கள் வேண்டுமென்றே தவறான செய்திகளை ஒளிபரப்புவதாகவும், தங்கள் ட்விட்டர் கணக்கிலிருந்து ட்விட் செய்வதாகவும் புகாரளிக்கப்பட்டிருக்கிறது. விவசாயப் பேரணியில் கலந்து கொண்ட கலவரக்காரர் ஒருவரை காவலர்கள் சுட்டுக் கொன்றதாக திட்டமிட்டுச் செய்திகளை வெளியிட்டார்கள் எனவும் கூறப்பட்டிருக்கிறது.
இந்த பத்திரிகையாளர்கள் மீது கடந்த சனிக்கிழமை இரவு, டெல்லி மற்றும் மத்தியப் பிரதேச காவல் துறையும் இதே போன்ற வழக்குகளை பதிவு செய்துள்ளது.
- அர்னாப் கோஸ்வாமி நடத்திய ரிபப்ளிக் டிவி நிகழ்ச்சிக்கு பிரிட்டனில் அபராதம்
- சோசலிசம் குறித்து அம்பேத்கரின் கருத்து என்ன? - வெளிச்சத்துக்கு வராத பக்கங்கள்
இவ்வாறாக ஊடகவியலாளர்கள் மீது அடுக்கடுக்காக வழக்குகள் தொடுக்கப்படுவது தொடர்பாக பதிலளிப்பதற்காக பல்வேறு பத்திரிகையாளர்கள் சங்கங்கள் இணைந்து ஒரு பத்திரிகையாளர் சந்திப்பை நடத்தின.
அதில் பங்கெடுத்த ஊடகவியலாளர் சீமா முஸ்தஃபா, "இதுபோன்ற சூழலில் எப்படி பத்திரிகையாளர்கள் தங்கள் பணியைச் செய்ய முடியும். இந்த குற்றச்சாட்டுகள் பத்திரிகையாளர்களை மட்டும் பயமுறுத்துவதற்கு மட்டும் இல்லை, தங்கள் பணியைச் செய்யும் ஒவ்வொருவரையும் பயமுறுத்துவதற்கு தான்" என்றார்.
ஞாயிற்றுக்கிழமை 'தி ஒயர்' பத்திரிகையின் ஆசிரியர் சித்தார்த் வரதராஜன் மீது உத்தர பிரதேசத்தின் ராம்பூர் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவுசெய்யப்பட்டுள்ளது.
விவசாயிகளின் டிராக்டர் பேரணியின் போது ஒரு போராட்டக்காரர் கொல்லப்பட்டது தொடர்பாக செய்த ட்விட்டர் பதிவின் அடிப்படையில், இந்திய தண்டனைச் சட்டத்தின் கீழ் அவர் மீது வழக்கு பதியப்பட்டிருப்பதாக 'தி இந்து' நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
முந்தைய வழக்குகள்
கடந்த சில ஆண்டுகளாக பத்திரிகையாளர்கள் மீது பல்வேறு வழக்குகள் தொடுக்கப்பட்டுக் கொண்டே தான் இருக்கின்றன. குறிப்பாக உத்தர பிரதேச மாநிலத்தில்.
அங்கு கடந்த ஒன்றரை ஆண்டுகளில் மட்டும் சுமார் 15 பத்திரிகையாளர்கள் மீது வழக்குகள் பதியப்பட்டிருக்கின்றன.
கடந்த 2019ஆம் ஆண்டு ஆகஸ்ட் 31 அன்று, அரசுப் பள்ளிகளில் நடக்கும் முறைகேடுகள் மற்றும் குழந்தைகளுக்கான மதிய உணவுத் திட்டங்களிலுள்ள பிரச்சனைகள் தொடர்பாக செய்தி வெளியிட்டதற்கு பங்கஜ் ஜெய்ஸ்வால் என்கிற பத்திரிகையாளர் மீது வழக்கு தொடுக்கப்பட்டது. கடுமையான எதிர்ப்புகளுக்குப் பிறகு தான் அவர் அந்த வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டார்.
2020 செப்டம்பர் 16 அன்று சீதாபூர் தனிமைப்படுத்துதல் மையத்தைக் குறித்து எழுதியதற்காக ரவிந்த்ரா சக்சேனா என்கிற பத்திரிகையாளர் மீது ஆதி திராவிடர் மற்றும் மலைவாழ் மக்கள் சட்டங்களின் கீழ் வழக்கு தொடுக்கப்பட்டது. அதோடு அரசுப் பணிகளுக்கு இடையூறு விளைவித்ததாகவும் அவர் மீது வழக்கு தொடுக்கப்பட்டது. இப்படி பல வழக்குகளை எடுத்துக் காட்டலாம்.
காவல்துறை பின்பற்ற வேண்டிய விதிமுறைகள்
பல வழக்குகளில் காவல் துறையினர் முறையாக கைது விதிமுறைகளைப் பின்பற்றுவதில்லை எனக் கூறப்படுகிறது.
கேரளாவை சேர்ந்த சித்திக் காப்பான் என்ற பத்திரிகையாளர் ஹத்ராஸ் சம்பவம் தொடர்பாக செய்திகளைச் சேகரிக்கச் சென்ற போது உத்தர பிரதேச காவலர்களால் கைது செய்யப்பட்டார். அடுத்த 24 மணி நேரத்துக்கு அவர் எங்கு வைக்கப்பட்டார் என்கிற விவரம் அவர் குடும்பத்தினருக்கோ அல்லது நண்பர்களுக்கோ தெரியபடுத்தவில்லை.
- அர்னாப் கோஸ்வாமி கைது: தாக்கப்பட்டார் என்கிறது ரிபப்ளிக் தொலைக்காட்சி - நடந்தது என்ன?
- பணி நீக்கப்பட்ட ஊடக ஆசிரியர்: அவருக்கு ஆதரவாக ராஜினாமா செய்த 70 செய்தியாளர்கள்
'கேரளா யூனியன் ஆஃப் வொர்க்கிங் ஜர்னலிஸ்ட்' என்கிற அமைப்பு உச்ச நீதிமன்றத்தில் சித்திக் காப்பான் குறித்து ஆட்கொணர்வு மனுத்தாக்கல் செய்துதான் இதுகுறித்து அறிய நேரிட்டது. அதன் பிறகே உச்ச நீதிமன்றத்தின் விதிமுறைகளை மீறியதற்காக காவலில் வைக்கப்பட்டதாகக் கூறப்பட்டது. சுமார் மூன்று மாத காலமாக சித்திக் காப்பான் சிறையில் தான் இருக்கிறார்.
தற்போது கைது செய்யப்பட்ட மன்தீப் பூனியாவைப் பற்றியும், அவரின் குடும்பத்தினருக்கோ அல்லது அவரது நண்பர்களுக்கோ பல மணி நேரங்களுக்கு எவ்வித தகவலையும் தெரியப்படுத்தவில்லை. மன்தீப் பூனியா கைது செய்யப்பட்டு சுமார் 16 மணி நேரம் வரை அதுகுறித்து தங்களுக்கு எந்த தகவலும் அளிக்கப்படவில்லை என்கிறார் மந்தீப்பின் மனைவி.
அதோடு, மன்தீப் அவருடைய வழக்குரைஞர் இல்லாமலேயே நீதிபதிக்கு முன் ஆஜர்படுத்தப்பட்டார் என அவரது சக பத்திரிகையாளர்கள் மற்றும் வழக்குரைஞர்கள் கூறுகின்றனர்.
'தி ஒயர்' பத்திரிகையின் ஆசிரியர் சித்தார்த் வரதராஜன் தன் ட்விட்டர் பக்கத்தில் தமிழ் உள்பட பல்வேறு மொழிகளில் "கருத்து சுதந்திரத்தை அடைக்கும் அளவுக்கு எந்த ஒரு சிறைச்சாலையும் பெரிதல்ல" என்று பதிவிட்டுள்ளார்.
https://twitter.com/svaradarajan/status/1355841851731832833
இந்தியாவில் பத்திரிகைச் சுதந்திரம்
பாரிஸைச் சேர்ந்த 'ரிப்போர்ட்டர்ஸ் வித் அவுட் பார்டர்ஸ்' என்கிற அமைப்பு 180 நாடுகளைக் கொண்ட பத்திரிகை சுதந்திர பட்டியலை வெளியிட்டுள்ளது.
அதில் இந்தியா 142-வது இடத்தில் இருக்கிறது. கடந்த 2019-ம் ஆண்டு 136-வது இடத்தில் இருந்தது குறிப்பிடத்தக்கது.
இதற்கு பதிலளிக்கும் விதத்தில் மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர், "இந்தியாவில் மக்களுக்கு செய்திகளைத் தெரியப்படுத்துவதற்கும் மக்களை விழிப்படையச் செய்யவும் ஊடகங்களுக்கு அதிகாரம் இருக்கிறது. இந்தியாவில் ஊடகங்கள் முழுமையான சுதந்திரத்தை அனுபவித்து வருகின்றன. இந்தியாவின் பத்திரிகை சுதந்திரத்தை மோசமாகச் சித்தரிக்க விரும்பும் ஆய்வறிக்கைகளை இப்போது இல்லை என்றாலும் வருங்காலத்தில் நிச்சயம் வெளிக் கொண்டு வருவோம்" என்று தெரிவித்துள்ளார்.
பிற செய்திகள்:
- மியான்மரில் ராணுவ ஆட்சி அமல்: ஆங் சான் சூச்சி உள்ளிட்ட தலைவர்கள் கைது
- இந்திய பட்ஜெட் 2021: பணக்காரர்களுக்கு அதிக வரி விதிப்பாரா நிர்மலா சீதாராமன்?
- "டிராக்டர் பேரணிக்கு பிறகு 100க்கும் மேற்பட்ட விவசாயிகள் மாயம்" - அதிர்ச்சி தகவல்
- மரம் நடும் முன் நீங்கள் கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டிய 10 விதிகள்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
-
முதல் விக்கெட்? திமுக கூட்டணிக்கு ‘குட்பை' சொல்லும் வேல்முருகன்.. அதிருப்திக்கு என்ன காரணம்? பின்னணி இதுதான் -
ஆதவை கண்டித்த ரஜினிகாந்த்..பாஜக சரத்குமாரை எப்போது கண்டிப்பிங்க.. வீடியோவால் சூப்பர் ஸ்டாரை சீண்டும் தவெக -
130 தொகுதிகளில் வெற்றி! திமுகவை அலற விட்ட எம்ஜிஆர்.. 77க்குப் பின் 10 ஆண்டுகள் பறந்த அதிமுக கொடி! -
"போரில் புதின் என்ட்ரி".. ஈரான் உச்ச தலைவரை ராணுவ விமானத்தில் தூக்கி சென்ற ரஷ்யா? பரபரப்பு தகவல் -
காட்டி கொடுக்கும் ரஷ்யா.. அமெரிக்க படைகள் தலைக்கு மேல் சுற்றும் கத்தி.. பெரிய சிக்கலில் டிரம்ப்? -
சிங்கம் களமிறங்கிடுச்சு.. காலை சிவி சண்முகம்.. மாலை திண்டுக்கல் சீனிவாசன்! வாயை விட்டதால் கண்டனம்! -
பழைய மீட்டர் போய் புது மீட்டர் வந்தாலே கரண்ட் பில் எகிறுகிறதா? EB வாரியம் சொல்லாத அந்த 1 ரகசியம் இதோ -
"விவாகரத்து + தேர்தல்".. சென்னையில் சொத்துகளை அவசரஅவசரமாக விற்கும் நடிகர் விஜய்..ஷாக் காரணங்கள் -
வாரத்தில் 4 நாள் தான் வேலை.. 3 நாள் லீவு! எரிபொருள் தட்டுப்பாட்டை கட்டுப்படுத்த இலங்கை அதிரடி முடிவு -
சூப்பர் ஸ்டார் ரஜினி சொன்ன 4 பேரை கவனிச்சீங்களா? விஜய்யை முளையிலேயே ஆஃப் செய்து? எங்கேயோ கேட்ட குரல் -
கூட்டணி சேர விடாமல் விஜய்யை தடுக்கும் "அந்த" 2 பேர்? பணத்திற்கு எங்க போறது? குமுறும் தவெகவினர் -
Thaai Kizhavi OTT: ஓடிடியில் வெளியாகும் தாய் கிழவி.. எப்போது, எதில் பர்க்கலாம்? வெளியான தகவல்















Click it and Unblock the Notifications