ஆம் ஆத்மி எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்கத்திற்கு தடை விதிக்க முடியாது.. டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு
ஆம் ஆத்மி எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்கத்துக்கு இடைக்கால தடை விதிக்க முடியாது என டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்து இருக்கிறது.
டெல்லி: ஆம் ஆத்மி எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்கத்துக்கு இடைக்கால தடை விதிக்க முடியாது என டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்து இருக்கிறது.
டெல்லியில் ஆம் ஆத்மி அரசு கடந்த 2015-ஆம் ஆண்டு பதவியேற்றது. மொத்தம் இருக்கும் 70 இடங்களில் 66 இடங்களில் அந்த கட்சி வெற்றி பெற்றது. இதில் அல்கா லம்பா, ஜர்னைல் சிங், ஆதர்ஷ் சாஸ்திரி, ராஜேஷ் குப்தா உள்ளிட்ட அனைவரும் எம்.எல்.ஏவாக இருந்து கொண்டே பார்லிமென்ட்ரி செக்ரெட்டரி எனப்படும் அமைச்சர்களின் செயலாளர்கள் என்ற பதவியில் செயல்பட்டு வந்தனர்.

எம்.எல்.ஏ.க்களாக இருக்கும் யாரும் இப்படி இரண்டு பணிகளில் ஈடுபட கூடாது என்ற சட்டம் இருக்கிறது. இதுகுறித்து தேர்தல் ஆணையத்திடமும் புகார் அளிக்கப்பட்டது.
இதன் காரணமாக தற்போது குடியரசு தலைவராக இருக்கும் ராம்நாத் கோவிந்துக்கு தேர்தல் ஆணையம் பரிந்துரை ஒன்று வழங்கியது. அதில் ஆம் ஆத்மி எம்.எல்.ஏக்கள் 20 பேரை தகுதி நீக்கம் செய்யலாம் என்று கூறியது.
இந்த பரிந்துரை ஏற்கப்பட்டு இவர்கள் 20 பேரும் பதவிநீக்கம் செய்யப்பட்டார்கள். ஆம் ஆத்மி இதற்கு எதிராக டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து இருக்கிறது.
இதில் தகுதி நீக்கத்திற்கு உடனடியாக இடைக்கால தடை விதிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்து இருந்தது. இதை டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதிகள் இன்று விசாரித்தனர்.
அதில் ''ஆம் ஆத்மி எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்கத்துக்கு இடைக்கால தடை விதிக்க முடியாது. எம்.எல்.ஏக்கள் மீதான தடை தொடரும்'' என்று குறிப்பிட்டுள்ளனர்.
-
சிபிஐ தொடங்கி ED வரை.. எல்லாருக்கும் பறந்த லெட்டர்.. தமிழக தேர்தலுக்கு தேர்தல் ஆணையம் அதிரடி -
அடேங்கப்பா.. தமிழகத்தில் 3 நாட்களில் ரூ.42.65 கோடி பறிமுதல்! கறார் அதிகாரிகள்.. கண்காணிப்பு தீவிரம்! -
இவ்வளவு ஸ்ட்ரிக்டா? 2 நாளில் 23 கோடி சிக்கியது! பணம், பொருளாக அள்ளிய தேர்தல் அதிகாரிகள்! முழு விவரம் -
"327 பார்வையாளர்கள் நியமனம்".. தமிழகத்தை கண்ட்ரோலில் எடுத்த தேர்தல் ஆணையம்.. அதிரடி அறிவிப்பு -
எனக்கு நயன்தாரா வேணும்.. ஸ்டாலின் கனவை நிறைவேற்றுவாரா சி.வி சண்முகம் சர்ச்சை பேச்சு -
அமெரிக்க கடற்படை உலகிலேயே மிகவும் சக்தி வாய்ந்தது.. ஏன் ஹார்முஸ் ஜலசந்தியை பாதுகாக்க முடியவில்லை? -
இன்னும் சில மணி நேரத்தில் அமெரிக்கா எடுக்கும் முடிவு.. தங்க மார்கெட்டை தாக்க போகும் சூறாவளி! -
Thaai Kizhavi OTT: ஓடிடியில் வெளியாகும் தாய் கிழவி.. எப்போது, எதில் பர்க்கலாம்? வெளியான தகவல் -
அரபு நாடுகளில் இந்தியர்களின் 12, 000 கோடி முதலீடு காலி.. 800 நிறுவனங்கள் எதிர்காலம் கேள்விக்குறி! -
கோவை தெற்கில் களமிறங்கும் மகேந்திரன்.. ஆதரவாக இருக்கும் செந்தில் பாலாஜி.. கணக்கு போடும் ஸ்டாலின்! -
ஆதவ் அர்ஜுனா உடைத்த அடுத்த பர்னிச்சர்.. தவெக நிர்மல்குமாரின் பதிவும் ஒரே வார்த்தையில் காலி -
திருப்பரங்குன்றம் வழக்கு.. நீதிபதி ஜிஆர் சுவாமிநாதன் உத்தரவுக்கு இரு நீதிபதிகள் அமர்வு இடைக்கால தடை












Click it and Unblock the Notifications