ஊழல் வழக்குக்கு தடை விதிக்க முடியாது... அன்புமணிக்கு டெல்லி உயர்நீதிமன்றம் "செக்"!
டெல்லி: முன்னாள் மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் மீது, விதிகளை மீறி மருத்துவக் கல்லூரிகளுக்கு அனுமதி வழங்கியதாக தொடரப்பட்டுள்ள வழக்கை கீழ் நீதிமன்றம் விசாரிக்கத் தடை இல்லை என்று டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாக அன்புமணி தாக்கல் செய்த மனுவையும் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
மத்திய சுகாதாரத் துறை அமைச்சராக அன்புமணி ராமதாஸ் இருந்த போது, மத்திய பிரதேசம் இந்தூரிலும், லக்னோவிலும் தனியார் மருத்துவக் கல்லூரி தொடங்க விதிமுறைகளை மீறி அனுமதி அளித்ததாக புகார் எழுந்தது. இந்தப் புகார் தொடர்பாக அன்புமணி ராமதாஸ் உள்ளிட்ட 9 பேர் மீது சிபிஐ வழக்கு தொடர்ந்துள்ளது. இது தொடர்பான விசாரணை டெல்லியில் உள்ள பாட்டியாலா ஹவுசில் சிபிஐ தனி நீதிமன்றத்தில் நடந்து கொண்டிருக்கிறது.

தம் மீதான குற்றச்சாட்டுப் பிரிவுகளை மாற்ற வேண்டும் என்றும் இந்த வழக்கின் விசாரணைக்கு தடை விதிக்கக் கோரியும் அன்புமணி ராமதாஸ் வழக்கு ஒன்றை தொடர்ந்தார்.
இந்த வழக்கின் மீதான விசாரணை டெல்லி நீதிமன்றத்தில் இன்று வந்தது. அப்போது அன்புமணி ராமதாஸ் தாக்கல் செய்துள்ள மனுவை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. மேலும், அன்புமணி மீதான இந்த ஊழல் வழக்கை விசாரிக்க சிபிஐ நீதிமன்றத்திற்கு தடையில்லை என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications