டெல்லியில் ஒரு மாங்காய் திருடியதற்காக 14 வயது சிறுவன் அடித்துக் கொலை
Subscribe to Oneindia Tamil
டெல்லி: டெல்லியில் மாங்காய் திருடியதற்காக 14 வயது சிறுவன் அடித்துக் கொலை செய்யபப்பட்டுள்ளார்.
வடகிழக்கு டெலல்லியில் உள்ள புதிய சீமாபுரி பகுதியில் வசிக்கும் 14 வயது சிறுவன் மாங்காய் விற்பவரிடம் இருந்து ஒரு மாங்காயை திருடிவிட்டதாக கூறப்படுகிறது. அதன் பிறகு பூங்காவுக்கு சென்ற சிறுவன் தனது சகோதரர் சேக் சஹாபுத்தீனுடன் விளையாடிக் கொண்டிருந்திருக்கிறார்.
அப்போது அங்கு வந்த மாங்காய் வியாபாரி சிறுவனை அடித்ததுடன் இரும்புக் கம்பியால் தலையில் தாக்கியுள்ளார். இதில் தலையில் படுகாயம் அடைந்த சிறுவன் பலியானார். சிறுவனை காப்பாற்ற வந்த சஹாபுத்தீனையும் அந்த வியாபாரி தாக்கியுள்ளார்.
இது குறித்து சம்பவத்தை நேரில் பார்த்த கரீம் ஷா என்பவர் கூறுகையில்,
ஒரு மாங்காய் திருடியதற்காக சிறுவனை அடித்துக் கொன்றது கருணையற்ற செயல். இது மனிதத் தன்மை அற்றது என்றார்.












Click it and Unblock the Notifications