ஒற்றைப்படை...இரட்டைப்படை எண் கார் சோதனை ஓட்டம் - டெல்லியில் இன்று முதல் துவக்கம்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: டெல்லியில் தினசரி நாட்களில் ஒற்றை, இரட்டைப்படை எண் கார்கள் சோதனை முறையில் இயக்கப்படும் திட்டம் இன்று முதல் செயல்படுத்தப்படுகின்றது.

அளவுக்கு அதிகமாக உள்ள காற்று மாசுபாட்டை கட்டுப்படுத்தும் வகையில் ஒற்றைப்படை எண்கள் கொண்ட கார்கள் ஒற்றைப்படை தேதிகளிலும், இரட்டைப்படை எண்கள் கொண்ட கார்கள் இரட்டைப்படை தேதிகளிலும் சாலையில் செல்ல அனுமதிக்கும் திட்டத்தை 15 நாட்களுக்கு டெல்லி அரசு அறிமுகப்படுத்தி உள்ளது.

Delhi odd-even Live: First violator challenged, other even cars spotted

சோதனை முயற்சியாக இந்த திட்டம் இன்று தொடங்கி வருகிற 15 ஆம் தேதி வரை 15 நாட்களுக்கு காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை கடைப்பிடிக்கப்படும். இந்த கட்டுப்பாட்டை மீறுபவர்களுக்கு ரூபாய் 2 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும்.

பெண்களால் ஓட்டப்படும் கார்கள், சி.என்.ஜி. வாயு என்ஜின் பொருத்தப்பட்ட கார்கள், பேட்டரியால் இயங்கும் கார்கள், மாற்றுத்திறனாளிகள், ஆம்புலன்ஸ் வண்டிகள், தீயணைப்பு வண்டிகள், ஆட்டோ ரிக்‌ஷா, பஸ்கள், இரு சக்கர வாகனங்கள் மற்றும் வி.ஐ.பி வாகனங்களுக்கு இந்த திட்டத்தில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. ஞாயிற்றுக்கிழமைகளில் அனைத்து வாகனங்களுக்கும் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+