சுதந்திர தினத்தையொட்டி 1,250 கைதிகளுக்கான தண்டனை குறைப்பு!

அண்மையில் மத்திய அரசால் டெல்லி சிறைச்சாலைகளின் தலைமை இயக்குநராக நியமிக்கப்பட்ட அலோக் வர்மா, நாட்டின் 68-ஆவது சுதந்திர தினத்தையொட்டி டெல்லி திகார், ரோகிணி சிறைகளில் உள்ள சுமார் 1,250 கைதிகளின் நன்னடத்தையைக் கருத்தில்கொண்டு அவர்களது தண்டனைக் காலத்தை குறைத்து உத்தரவிட்டார்.
இதன்படி, குறைந்தபட்சம் 15 நாள் முதல் அதிகபட்சமாக 3 மாதங்கள் வரை சிறைக் கைதிகளின் தண்டனைக் காலத்திலிருந்து குறைக்கப்பட்டுள்ளது. ஓராண்டுக்கு மேல் சிறையில் இருப்பவர்களின் நன்னடத்தையைக் கண்டறிந்து அவர்களுக்கு குறைந்தபட்சமாக 15 நாள் வரை தண்டனைக் குறைப்பு செய்யப்பட்டுள்ளது.
10 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் உள்ளவர்களின் நன்னடத்தையைக் கண்டறிந்து அவர்களுக்கு 3 மாதங்கள் வரை தண்டனைக் காலம் குறைக்கப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவை சமீபத்தில்தான் அலோக் வர்மா பிறப்பித்ததாக சிறைத் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
சிறையில் உள்ள கைதிகளின் நடத்தையை அடிப்படையாகக் கொண்டு இந்த தண்டனை குறைப்பு வழங்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications