நீதிபதிகளின் தொலைபேசி ஒட்டுகேட்பு... ஆதாரத்தை தர கேஜ்ரிவாலுக்கு டெல்லி போலீஸ் நெருக்கடி!
நீதிபதிகளின் தொலைபேசிகள் ஒட்டுக் கேட்கப்படுவதாக அரவிந்த் கெஜ்ரிவால் கூறிய புகாருக்கு ஆதாரத்தை கோரியுள்ளது டெல்லி போலீஸ்.
டெல்லி: நீதிபதிகளின் தொலைபேசிகளை மத்திய அரசு ஒட்டுக் கேட்பதாக தெரிவித்த குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரத்தை தருமாறு டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு டெல்லி போலீஸ் கடிதம் அனுப்பியுள்ளது.
டெல்லி உயர்நீதிமன்றத்தின் 50ஆம் ஆண்டு பொன்விழா அண்மையில் நடைபெற்றது. இதில் பிரதமர் நரேந்திர மோடி, உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.எஸ்.தாக்கூர், டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

அப்போது பேசிய அரவிந்த் கெஜ்ரிவால், உச்சநீதிமன்ற மற்றும் உயர்நீதிமன்ற நீதிபதிகளின் தொலைபேசி உரையாடல்கள் ஒட்டுக்கேட்கப்படுவதாக பிரதமர் மோடிக்கு முன்னிலையில் பகிரங்கமாக குற்றம்சாட்டினார்.
கெஜ்ரிவாலின் இப் பேச்சு நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. கெஜ்ரிவாலின் குற்றச்சாட்டு உண்மையாக இருந்தால் நீதித்துறைக்கு இதைவிட பெருத்த அவமானம் ஏதும் இல்லை என்ற ரேஞ்சிலும் கருத்து கூறப்பட்டது.
கெஜ்ரிவால் பேசி முடித்ததும் விழா மேடையில் பேசிய சட்ட அமைச்சர் ரவி சங்கர் பிரசாத், அவரது குற்றச்சாட்டை உடனடியாக மறுத்தார். ஊகத்தின் அடிப்படையில் கூறப்படும் குற்றச்சாட்டுகளை ஏற்க முடியாது என்றும் ரவிசங்கர் பிரசாத் கூறினார்.
கெஜ்ரிவாலின் குற்றச்சாட்டுக்கு மறுப்பு தெரிவித்து சட்ட அமைச்சகம் அறிக்கையும் வெளியிட்டது. இந்நிலையில் இதுதொடர்பாக டெல்லி போலீஸ் கமிஷனர், அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.
அதில் அண்மையில் நடைபெற்ற டெல்லி உயர்நீதிமன்றத்தின் பொன் விழா நிகழ்ச்சியில், நீதிபதிகளின் தொலைபேசி பேச்சுகள் ஒட்டுக்கேட்கப்படுவதாக தாங்கள் குற்றம் சாட்டியிருந்தீர்கள். அவ்வாறு நீதிபதிகளின் தொலைபேசி உரையாடல்கள் ஒட்டுக்கேட்கப்பட்டிருந்த்தால் சம்பந்தப்பட்டவர்கள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். எனவே உங்கள் குற்றச்சாட்டு தொடர்பான ஆதாரங்களை காவல்துறைக்கு அளித்தால் அதன்மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அக் கடிதத்தில் டெல்லி போலீஸ் கமிஷனர் குறிப்பிட்டுள்ளார்.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது












Click it and Unblock the Notifications