நீதிபதிகளின் தொலைபேசி ஒட்டுகேட்பு... ஆதாரத்தை தர கேஜ்ரிவாலுக்கு டெல்லி போலீஸ் நெருக்கடி!
நீதிபதிகளின் தொலைபேசிகள் ஒட்டுக் கேட்கப்படுவதாக அரவிந்த் கெஜ்ரிவால் கூறிய புகாருக்கு ஆதாரத்தை கோரியுள்ளது டெல்லி போலீஸ்.
டெல்லி: நீதிபதிகளின் தொலைபேசிகளை மத்திய அரசு ஒட்டுக் கேட்பதாக தெரிவித்த குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரத்தை தருமாறு டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு டெல்லி போலீஸ் கடிதம் அனுப்பியுள்ளது.
டெல்லி உயர்நீதிமன்றத்தின் 50ஆம் ஆண்டு பொன்விழா அண்மையில் நடைபெற்றது. இதில் பிரதமர் நரேந்திர மோடி, உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.எஸ்.தாக்கூர், டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

அப்போது பேசிய அரவிந்த் கெஜ்ரிவால், உச்சநீதிமன்ற மற்றும் உயர்நீதிமன்ற நீதிபதிகளின் தொலைபேசி உரையாடல்கள் ஒட்டுக்கேட்கப்படுவதாக பிரதமர் மோடிக்கு முன்னிலையில் பகிரங்கமாக குற்றம்சாட்டினார்.
கெஜ்ரிவாலின் இப் பேச்சு நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. கெஜ்ரிவாலின் குற்றச்சாட்டு உண்மையாக இருந்தால் நீதித்துறைக்கு இதைவிட பெருத்த அவமானம் ஏதும் இல்லை என்ற ரேஞ்சிலும் கருத்து கூறப்பட்டது.
கெஜ்ரிவால் பேசி முடித்ததும் விழா மேடையில் பேசிய சட்ட அமைச்சர் ரவி சங்கர் பிரசாத், அவரது குற்றச்சாட்டை உடனடியாக மறுத்தார். ஊகத்தின் அடிப்படையில் கூறப்படும் குற்றச்சாட்டுகளை ஏற்க முடியாது என்றும் ரவிசங்கர் பிரசாத் கூறினார்.
கெஜ்ரிவாலின் குற்றச்சாட்டுக்கு மறுப்பு தெரிவித்து சட்ட அமைச்சகம் அறிக்கையும் வெளியிட்டது. இந்நிலையில் இதுதொடர்பாக டெல்லி போலீஸ் கமிஷனர், அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.
அதில் அண்மையில் நடைபெற்ற டெல்லி உயர்நீதிமன்றத்தின் பொன் விழா நிகழ்ச்சியில், நீதிபதிகளின் தொலைபேசி பேச்சுகள் ஒட்டுக்கேட்கப்படுவதாக தாங்கள் குற்றம் சாட்டியிருந்தீர்கள். அவ்வாறு நீதிபதிகளின் தொலைபேசி உரையாடல்கள் ஒட்டுக்கேட்கப்பட்டிருந்த்தால் சம்பந்தப்பட்டவர்கள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். எனவே உங்கள் குற்றச்சாட்டு தொடர்பான ஆதாரங்களை காவல்துறைக்கு அளித்தால் அதன்மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அக் கடிதத்தில் டெல்லி போலீஸ் கமிஷனர் குறிப்பிட்டுள்ளார்.
-
மகளிர் உரிமைத் தொகை ரூ.2500 இருக்கட்டும், புதிய பயனாளிகளுக்கு அடுத்த விண்ணப்பம் எப்போது -
224 யூனிட்டுகளுக்கு 200 யூனிட் இலவசம் என்றால் 112 தானே வரனும்.. ஏன் 312 காட்டுகிறது.. விளக்கம் -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி












Click it and Unblock the Notifications