டெல்லியில் போராடிய தமிழக விவசாயிகள் மீது கொடூர தடியடி - கைது
டெல்லியில் ரிசர்வ் வங்கி முன்பு போராடிய தமிழக விவசாயிகள் மீது டெல்லி போலீஸ் கொடூர தடியடி நடத்தி கைது செய்துள்ளது.
டெல்லி: டெல்லியில் ரிசர்வ் வங்கியை முற்றுகையிட முயன்ற தமிழக விவசாயிகள் மீது டெல்லி போலீஸ் கொடூரமாக தடியடி நடத்தி கைது செய்துள்ளது.
விவசாய கடன்களை தள்ளுபடி செய்யக் கோரியும், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியும் தமிழக விவசாயிகள் டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் கடந்த 25 நாட்களாக போராடி வருகின்றனர். இன்று தங்களின் கைகளை அறுத்துக்கொண்டு போராட்டம் நடத்தினர்.
இதனிடையே விவசாயக் கடன் தள்ளுபடி என்பது வங்கிகளின் நேர்மையான கடன் கொள்கைக்கு எதிரானது என்றும், நேர்மையான முறையில் கடன் பெறுவதையும் இது பாதிக்கும் என்றும் உர்ஜித் பட்டேல் கூறியுள்ளார்.

உர்ஜித் பட்டேல்
விவசாயக் கடன் தள்ளுபடியால், வங்கிகளில் கடன் பெறுபவர்கள் எதிர்காலத்தில் அதை திருப்பிச் செலுத்துவதிலும் சிக்கல் ஏற்படுத்தும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
உர்ஜித் பட்டேலின் கருத்துக்கு டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தமிழக விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

விவசாயிகள் கண்டனம்
தென்னிந்திய நதிகள் இணைப்பு சங்கத்தின் தலைவர் அய்யாக்கண்ணு, விவசாயிகள் நலனில் அரசுக்கோ வங்கிகளுக்கோ அக்கறையில்லை என்றும் குற்றம்சாட்டினார். இன்று உர்ஜித் பட்டேலை கண்டித்து தமிழக விவசாயிகள் இன்று ரிசர்வ் வங்கியை முற்றுகையிடப் போவதாகவும் அறிவித்தனர்.

கொடூர தடியடி
ரிசர்வ் வங்கி முன்பு போராடிய விவசாயிகள் ஆளுநர் உர்ஜித் பட்டேலுக்கு எதிராக முழக்கமிட்டனர். ரிசர்வ் வங்கியை முற்றுகையிட முயன்ற விவசாயிகள் மீது டெல்லி போலீசார் கொடூரமாக தாக்கினர்.

விவசாயிகள் கைது
கடந்த 25 நாட்களாக போராடிய விவசாயிகளை கொடூரமாக தாக்கிய டெல்லி போலீஸ் அவர்களை கைது செய்தது. அவர்களை மீண்டும் ஜந்தர் மந்தர் பகுதிக்கு கொண்டு வந்தது. விவசாயிகளை தாக்கி அவர்களை கைது செய்த சம்பவம் தமிழக விவசாயிகளிடையே அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications