தமிழக விவசாயிகள் மீது கண்மூடித்தனமாக தடியடி நடத்திய 'மோடி' போலீஸ்!
டெல்லியில் ரிசர்வ் வங்கியை முற்றுகையிட்டு போராட அய்யாக்கண்ணு தலைமையில் பேரணியாகச் சென்று தமிழக விவசாயிகள் மீது கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்தி கைது செய்தது டெல்லி போலீஸ்.
டெல்லி: டெல்லியில் விவசாயிகள் 26 ஆவது நாளாகப் போரட்டம் நடத்தி வருகின்றனர். நேற்று விவசாயிகள் ரிசர்வ் வங்கி முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்ட போது, அவர்களை டெல்லி போலீஸார் வன்முறையாகக் கையாண்டு, தடியடி நடத்தினர்.
டெல்லியில், ஜந்தர் மந்தர் பகுதியில் போராடி வரும் தமிழக விவசாயிகள் தங்களது வங்கிக் கடனை ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கையுடன், ரிசர்வ் வங்கியை முற்றுகையிட பேரணியாகச் சென்றனர்.

இந்தப் பேரணிக்கு டெல்லி போலீஸ் ஒப்புதல் அளிக்கவில்லை. அதனால் பேரணியாகச் சென்ற அய்யாக்கண்ணு உள்ளிட்ட அனைத்து விவசாயிகளையும் காட்டுமிராண்டித்தனமாக கையாண்டு, தடியடி நடத்தி வேனில் ஏற்றியது.
பின்பு, அய்யாக்கண்ணு தவிர மற்றவர்களை, ஜந்தர் மந்தர் பகுதியிலேயே இறக்கிவிட்டது. ஆனால், விவசாயிகள் அய்யாக்கண்ணுவை விடுவிக்க வேண்டும் என்று ஜந்தர் மந்தர் பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்டதால், நேற்று மாலை அவரை காவல்துறை விடுதலை செய்தது.












Click it and Unblock the Notifications