சுனந்தா எப்படி இறந்தார்?: சசி தரூரிடம் 5 மணிநேரம் துருவித் துருவி விசாரித்த டெல்லி போலீஸ்
டெல்லி: சுனந்தா புஷ்கரின் மரணம் குறித்து டெல்லி போலீசார் முன்னாள் மத்திய அமைச்சர் சசி தரூரிடம் 5 மணிநேரம் விசாரணை நடத்தியுள்ளனர்.
முன்னாள் மத்திய அமைச்சர் சசி தரூரின் மனைவி சுனந்தா புஷ்கர் கடந்த 2014ம் ஆண்டு ஜனவரி மாதம் 17ம் தேதி டெல்லியில் உள்ள நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் பிணமாகக் கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. முதலில் தற்கொலை என்று டெல்லி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். பின்னர் அது கொலை வழக்காக மாற்றப்பட்டது.

சுனந்தா ஆல்பிராக்ஸ் என்ற மாத்திரையை அளவுக்கு அதிகமாக எடுத்துக் கொண்டதால் இறந்துவிட்டதாக கூறப்படுகிறது. இது குறித்து டெல்லி போலீசார் சிறப்பு குழு அமைத்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இந்த குழு முன்னாள் மத்திய அமைச்சர் சசி தரூரிடம் இரண்டு முறை விசாரணை நடத்தியது. இந்நிலையில் போலீசார் சசி தரூரிடம் சனிக்கிழமை 5 மணிநேரம் விசாரணை நடத்தினர்.
சுனந்தாவிடம் ஆல்பிராக்ஸ் மாத்திரை எப்படி அளவுக்கு அதிகமாக இருந்தது என்று போலீசார் தரூரிடம் கேட்டுள்ளனர். மேலும் சுனந்தா இறப்பதற்கு முந்தைய தினம் கணவன், மனைவி இடையே நடந்த தகராறு குறித்தும் தரூரிடம் கேட்கப்பட்டுள்ளது.
தரூர் போலீசார் கேட்ட கேள்விகளுக்கு அமைதியாக பதில் அளித்துள்ளார். சுனந்தாவின் மரணத்தில் எந்த மர்மமும் இல்லை என்றும், அவர் எடுத்துக் கொண்ட மாத்திரைகளால் தான் இறந்தார் என்றும் தரூர் திரும்பத் திரும்ப கூறியுள்ளார்.
-
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
உதயநிதி மகனின் சொத்து, விஜய் மகனுக்கு தந்த கடன்.. கார்த்தி சிதம்பரம் சொன்ன முக்கியமான பாயிண்ட் -
காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலகுகிறேன்.. அறிவித்தார் செல்வபெருந்தகை! பின்னணி இதுதான் -
ஆளூர் ஷாநவாஸ் செய்த அயோக்கியத்தனம்.. விசிகவில் சீட் கொடுக்காதது ஏன்? கொந்தளித்த சங்க தமிழன் -
திண்டுக்கல் எஸ்ஐக்கு மனமகிழ் மன்றத்தில் இருந்து வந்த அழைப்பு.. கனவிலும் நினைக்காத சம்பவம் -
சிறகடிக்க ஆசை: விஜயாவை லெப்ட் ரைட் வாங்கிய மீனா.. அண்ணாமலை கொடுத்த ஐடியா! மாஸ் காட்டிய முத்து -
அடுத்தடுத்து அண்ணாமலையை சந்தித்த கோவை அதிமுக வேட்பாளர்கள்.. டெல்லிக்கு வேலுமணி க்ளியர் மெசேஜ் -
பாஜக சிட்டிங் எம்.எல்.ஏவுக்கு சீட் மறுப்பு.. தொகுதி மாறிய 2 MLAக்கள்! வேட்பாளர் பட்டியலில் ட்விஸ்ட்! -
வில்லிவாக்கத்தில் நானே வேட்பாளர் என நினைத்துக் கொள்ளுங்கள்.. நண்பனுக்காக களம் இறங்கிய சபரீசன் பேட்டி -
கிரவுண்ட் ஜீரோ ரிப்போர்ட்.. தரைதட்டிய களப்பணி.. கிரவுண்டில் திணறும் தவெக.. விஜய்க்கு சிம்ம சொப்பனம் -
பாஜக வேட்பாளர் பட்டியல் வந்ததுமே அண்ணாமலை கொடுத்த முதல் ரியாக்ஷன்!












Click it and Unblock the Notifications