சத்து மாத்திரையை அதிகம் சாப்பிட்ட பள்ளிச் சிறுமி மரணம்.. டெல்லியில் பரபரப்பு

Subscribe to Oneindia Tamil

டெல்லி: டெல்லியில் உள்ள சர்வோதயா கன்யா வித்யாலாய பள்ளியில் 9ம் வகுப்பு மாணவி ஒருவர் சத்து மாத்திரையை அதிகம் சாப்பிட்டு பலியான விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து விசாரணை நடத்த துணை முதல்வர் மனீஷ் சிசோடியா உத்தரவிட்டுள்ளார்.

சம்பந்தப்பட்ட மாணவி வசிரிப்பூரில் உள்ள பள்ளி ஒன்றில் 9ம் வகுப்பு படித்து வந்தவர். இவர் கடந்தவாரம் 4ம் தேதி பள்ளியில் 12 சத்து மாத்திரைகளைச் சாப்பிட்டதாகத் தெரிகிறது.

Delhi: School girl dies of iron tablet overdose; Manish Sisodia orders inquiry

அதனைத் தொடர்ந்து வீடு திரும்பியதும் கடும் வயிற்று வலியால் அவதிப்பட்ட அம்மாணவியை இந்து ராவ் மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்த்தனர். ஆனால், அங்கு சிகிச்சைப் பலனின்றி பரிதாபமாக அவர் உயிரிழந்தார்.

பள்ளி நிர்வாகத்தின் அலட்சியத்தால்தான் தங்களது மகள் இறந்ததாக சிறுமியின் பெற்றோர் குற்றம் சாட்டியுள்ளனர். ஆனால், இக்குற்றச்சாட்டை பள்ளி நிர்வாகம் மறுத்துள்ளது.

இதுகுறித்து விசாரணை நடத்த துணை முதல்வர் மனீஷ் சிசோடியா உத்தரவிட்டுள்ளார். அதனைத் தொடர்ந்து, இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதுகுறித்து மனீஷ் சிசோடியா கூறுகையில், ‘வசிரிப்பூரில் உள்ள பள்ளியில் 9ம் வகுப்பு மாணவி சத்து மாத்திரையை அதிகம் சாப்பிட்டு பலியானது குறித்து விசாரிக்க சரஸ்வதி விஹார் துணைக் கலெக்டருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. அவர் இதுகுறித்து விசாரித்து அரசிடம் அறிக்கை சமர்பிப்பார்' எனத் தெரிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+