டெல்லியில் ரூ. 8 கோடி கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம்.. 3 பேர் கைது
டெல்லி: டெல்லியில், துப்பாக்கி முனையில் ரூ. 8 கோடி கொள்ளையடிக்கப்பட்ட சம்பவத்தில் 3 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
டெல்லியில் உள்ள மூ்ல்சந்த் பாலத்திற்கு அருகே கடந்த செவ்வாய்க்கிழமையன்று பட்டப் பகலில் துப்பாக்கி முனையில் காரில் வந்தவர்களிடமிருந்து ரூ. 8 கோடி பணம் கொள்ளையடிக்கப்பட்டது.
இதுகுறித்து நடத்தப்பட்ட விசாரணையில் அந்தப் பெண் ஐபிஎல் சூதாட்டக் கும்பல்களுக்குச் சொந்தமானதாக இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்தது. சம்பந்தப்பட்ட காரில் இருந்த நபர் பெயர் ராஜேஷ் கல்ரா. இவர் ஒரு தொழிலதிபர். ஆனால் இவருக்கு பெட்டிங் புக்கி என்ற இன்னொரு முகமும் உள்ளது.
ஹன்சி குரோனி சூதாட்ட சம்பவத்திலும் இவருக்குத் தொடர்பு இருந்து பல வருடங்களுக்கு முன்பு விசாரிக்கப்பட்டவர். கடந்த ஆண்டு நடந்த ஐபிஎல் போட்டிகளின்போது பல புக்கிகளுக்கு பெட் கட்டியப் பணத்தை இவர் தராமல் இழுத்தடித்து வந்ததாகவும் கூறப்படுகிறது. எனவே பாதிக்கப்பட்ட புக்கிகள் சேர்ந்துதான் இந்த கொள்ளையை நடத்தியிருக்கலாம் என்றும் போலீஸார் சந்தேகப்படுகின்றனர்.
மேலும் கொள்ளை போனது ரூ. 20 கோடி வரை இருக்கலாம் என்றும் போலீஸார் சந்தேகப்பட்டு வருகின்றனர். இந்த நிலையில் ஹரியானாவைச் சேர்ந்த 3 பேரைப் போலீஸார் கைது செய்துள்ளனர். ஹரியானாவைச் சேர்ந்த கும்பல்தான் இந்தக் கொள்ளைக்குக் காரணம் என்று கூறப்படுகிறது. கும்பலைச் சேர்ந்த மற்றவர்களையும் பிடிக்க வலை வீசப்பட்டுள்ளது.
-
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
எடப்பாடி பழனிசாமின்னா சும்மாவா.. வீட்டுக்குள் போன 3 அரசியல்வாதிகள்.. ஒரே நொடியில் ஆடிப்போன வேலுமணி -
மகளிருக்கு ரூ.2,500, விடியல் பயணம் திட்டம் எப்போது அமலாகும்? அமைச்சர் செங்கோட்டையன் கொடுத்த பதில்












Click it and Unblock the Notifications