பழைய ரூபாய் நோட்டு விவகாரம்.. கூட்டுறவு வங்கிகளுக்கான தடை நீக்கம்
பழைய ரூபாய் நோட்டுகளான 500 1000 ஆகியவற்றை வாங்க கூட்டுறவு வங்கிகளுக்கு விதிக்கப்பட்டிருந்த தடையை நீக்கி இருப்பதாக உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
டெல்லி: 500 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவிக்கப்பட்டு அவற்றை கூட்டுறவு வங்கிகளில் டெப்பாசிட் செய்ய தடை விதிக்கப்பட்டிருந்தது. இதற்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் தடை நீக்கப்பட்டிருப்பதாக உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
கடந்த நவம்பர் 8-ம் தேதி நள்ளிரவு முதல் 500, 1000 ரூபாய் பழைய நோட்டுகள் செல்லாது என மத்திய அரசு அறிவித்தது. இதனால் நாடு முழுவதும் மக்கள் பெரும் இன்னல்களை சந்தித்து வருகின்றனர்.

இந்நிலையில் செல்லாது என அறிவிக்கப்பட்ட பழைய ரூபாய் நோட்டுகளை வாங்க கூட்டுறவு வங்கிகளுக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. இதற்கு எதிராக கூட்டுறவு வங்கிகள் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு விசாரணையின் போது கூட்டுறவு வங்கிகளுக்கு விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்டுள்ளது என்றும், மேலும் இத்தடை நீக்கப்பட்டது குறித்து 2 நாட்களில் சுற்றிக்கை அனுப்பப்படும் என மத்திய அரசு வியாழக்கிழமை உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
இந்த அறிவிப்பின் மூலம் இனி பொதுமக்கள் கூட்டுறவு வங்கிகளில் டெபாசிட் செய்ய முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக ரூபாய் நோட்டு செல்லாது என்ற அறிவிப்பை எதிர்த்து நாடு முழுவதும் பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டன. இந்த வழக்குகள் அனைத்தையும் ஒரே வழக்காக உச்சநீதிமன்றம் விசாரித்து வருகிறது.
-
குஷ்பு ஜிம்னாஸ்டிக் சாம்பியன்.. சுந்தர் சிக்கு படித்துப் புரிந்து கொள்ளும் அறிவு இல்லை.. பிடிஆர் -
தர்மபுரியில் மருமகள் சௌமியாவுக்கு எதிராக களமிறங்க போகும் மாமனார் ராமதாஸ்.. அன்புமணி ரியாக்ஷ்ன் -
ஜுவல்லரி கடைகளுக்கு விழுந்த அடி! ஒரு ரூபாயில் தங்கம்.. இளைஞர்களின் ஸ்மார்ட் மூவ்! உரிமையாளர்கள் ஷாக் -
தவெக விற்கு தேர்தலில் ஆதரவு கிடையாது.. ‘ஜனநாயகன்’ லீக் காட்சிகளால் பின்வாங்கிய முஸ்லிம் மக்கள் கழகம் -
திமுகவிற்கு ‘குட்பை'.. விஜயின் தவெகவிற்கு மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் ஆதரவு! -
பெட்ரோல் டூவீலர்களுக்கு மொத்தமாக தடை.. அரசு திட்டவட்டம்! ஏற்கனவே பைக் வைத்திருப்போர் என்ன செய்யணும்? -
இரவிலேயே பாய் விரித்து இடம்.. நெல்லையில் எல்கேஜி அட்மிஷனுக்காக விடிய விடிய காத்திருந்த பெற்றோர்கள் -
மணி பிளான்ட் இனி தேவையில்லை.. காந்தம் போல பணத்தை ஈர்க்கும் 'அந்த' ஒரு செடி! வீட்டில் எங்கே வைக்கலாம் -
6 மாதங்களில் அண்ணாமலைக்கு தமிழக முதல்வர் பதவி! இபிஎஸ் தலையில் இடியை இறக்கிய திருமாவளவன் -
பாண்டியன் ஸ்டோர்ஸ்: மயில் கர்ப்பத்தை பற்றி பழனி சொன்ன விஷயம்! கோபத்தில் சரவணன்.. கதிர் செய்த நல்ல விஷயம் -
Gold: பசிபிக் கடலுக்கடியில் குவிந்து கிடக்கும் ”தங்கம்” கண்டுபிடித்த விஞ்ஞானிகள்.. எம்மாடியோவ்! -
ராகுல் காந்தியை பார்த்ததும்.. திரும்பி வந்து பேசிய பிரதமர் மோடி.. நாடாளுமன்ற வளாகத்தில் நடந்த சுவாரசியம்












Click it and Unblock the Notifications