ரூபாய் நோட்டு அறிவிப்பிற்கு எதிராக இணைந்த எதிர்க்கட்சிகள்.. 23ல் நாடாளுமன்ற வளாகத்தில் போராட்டம்
Subscribe to Oneindia Tamil
டெல்லி: ரூபாய் நோட்டு அறிவிப்பிற்கு எதிராக வரும் 23ம் தேதி நாடாளுமன்ற வளாகத்தில் எதிர்க்கட்சிகள் போராட்டம் நடத்த உள்ளன.
நாடாளுமன்ற வளாகத்திலுள்ள காந்தி சிலை அருகே போராட்டம் நடத்தப்பட உள்ளது. மக்களவை, மாநிலங்களவை எதிர்க்கட்சி எம்.பிக்கள் இன்று நடத்திய ஆலோசனை கூட்டத்தில் இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என கடந்த 8ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார். ஆனால் போதிய அளவுக்கு மக்களிடம் புதிய ரூபாய் நோட்டுக்களை கொண்டு செல்வதில் இன்னமும் சிக்கல் உள்ளது. எனவே எதிர்க்கட்சிகள் போராட உள்ளதாக அறிவித்துள்ளன.
ஆனால், கருப்பு பணத்திற்கு ஆதரவாக எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்துள்ளதாக மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் குற்றம்சாட்டினார்.












Click it and Unblock the Notifications