டெங்குவால் பாதிக்கப்பட்டோரின் நிஜ எண்ணிக்கையை அப்படியே மூடி மறைக்கும் அரசு!

Subscribe to Oneindia Tamil

டெல்லி: இந்தியாவில் டெங்கு காய்ச்சல் மருந்திற்கு பெருமளவிலான வர்த்தக வாய்ப்பு இருப்பதாக நிதி நிபுணர்களால் கணிக்கப்பட்டுள்ளது.

டெங்கு காய்ச்சல் பாதிப்பை தடுக்கவும் இந்தியாவில் ஆண்டுக்கு பல ஆயிரம் கோடி ரூபாய் செலவு ஏற்படுகிறது. ஆனால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை குறித்து அரசு சொல்லும் புள்ளி விவரமும், உண்மை நிலவரமும் வேறு மாதிரியாக உள்ளது. பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை, அரசு புள்ளி விவரத்தை விட 300 மடங்கு அதிகம் உள்ளதாக ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலக அளவில் இந்த நோயால் ஆண்டுக்கு 10 கோடி பேர் பாதிக்கின்றனர். இதில் 60 லட்சம் பேர் இந்தியாவில் உள்ளனர் என்று உலக சுகாதார அமைப்பு மதிப்பிட்டுள்ளது.

பிரான்சை சேர்ந்த நிறுவனம் டெங்கு காய்ச்சலுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடித்துள்ளது. இது அடுத்து ஆண்டில் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. டெங்கு பாதிப்பு புள்ளிவிவரங்களின்படி இந்தியாவில் மட்டும் இந்த மருந்துக்கு ரூபாய் 6,000 கோடிக்கு வர்த்தக வாய்ப்பு இருப்பதாக கணிக்கப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+