தேரா வன்முறை: மோடிக்கு எதிராக ஒரு வார்த்தை கூட பேசவில்லை- பஞ்சாப், ஹரியானா ஹைகோர்ட்
சன்டிகர்: தேரா வன்முறை தொடர்பாக பிரதமருக்கு எதிராக எதுவும் தெரிவிக்கவில்லை என்று பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர்நீதிமன்றம் விளக்கம் அளித்துள்ளது.
பாலியல் பலாத்கார வழக்கில் சிக்கிய தேரா சச்சா சவுதா அமைப்பின் தலைவரான சாமியார் குர்மீத் ராம் ரஹீம் சிங் குற்றவாளி என்று அறிவிக்கப்பட்டதும் தேரா, பஞ்ச்குலாவில் வன்முறை வெடித்தது. இதில் 32 பேர் பலியாகினர்.

அப்பொழுது பிரதமர் மோடி நாட்டின் பிரதமர், பாஜகவுக்கு மட்டும் அல்ல என்று பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர் நீதிமன்றம் தெரிவித்ததாக செய்திகள் வெளியாகின.
இந்நிலையில் பிரதமருக்கு எதிராக எதுவும் தெரிவிக்கவில்லை என்று உயர் நீதிமன்றம் விளக்கம் அளித்துள்ளது. பிரதமரின் பெயரைக் கூட குறிப்பிடவில்லை என்று அது மேலும் தெரிவித்துள்ளது.
தேரா வன்முறை குறித்து விசாரணை நடத்த சிறப்பு விசாரணை குழுக்களை அமைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.












Click it and Unblock the Notifications