தாண்டவாடும் வறட்சி..... நாடுவிட்டு நாடு போய் டான்ஸ் ஆட ரூ. 8 லட்சம் ஒதுக்கிய மகா. பா.ஜ.க. முதல்வர்!!
மும்பை: மகாராஷ்டிராவில் வறட்சி தாண்டவமாடும் நிலையில் மாநில முதல்வரின் நிவாரண நிதியில் இருந்து தாய்லாந்து செல்லும் டான்ஸ் குழுவுக்கு ரூ.8 லட்சம் ஒதுக்கியது பெரும் சர்ச்சையாக வெடித்துள்ளது.
மகாராஷ்டிர மாநிலத்தில் வறட்சியால் விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டு வருவது தொடர் கதையாகி வருகிறது. இது ஆளும் பா.ஜ.க.- சிவசேனா கூட்டணிக்கு பெரும் நெருக்கடியாக உள்ளது.

இந்த நிலையில் தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் டிசம்பர் மாதம் நடைபெறும் போட்டியில் பங்கேற்பதற்காக அரசு ஊழியர்களை உள்ளடக்கிய நடனக் குழுவுக்கு அம்மாநில முதல்வர் நிவாரண நிதியில் இருந்து ரூ.8 லட்சம் ஒதுக்கப்பட்டுள்ளது.
அனில் கால்கலி என்ற சமூக ஆர்வலர் தாக்கல் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் தாக்கல் செய்த மனுவின் மூலம் இந்த தகவல் தெரியவந்தது. இதற்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.
மேலும் அக் குழுவுக்கு அளிக்கப்பட்ட தொகையை அரசு திரும்பப் பெற வேண்டும்; முதல்வர் பட்னாவிஸ் சொந்தப் பணத்தைக் கொடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டு வருகின்றன.
இதனிடையே முதல்வர் பட்னாவிஸ் அளித்துள்ள விளக்கத்தில், வறட்சி, நீர் பாதுகாப்பு திட்டம் மற்றும் கலாசார நிகழ்ச்சி ஆகியவற்றுக்கு தனித்தனியே முதல்வர் நிவாரண நிதிகள் உள்ளன.
இதில் இருந்து தான் நடன குழுவிற்கு நிதி ஒதுக்கினேன். நான் வறட்சி நிவாரண நிதியை பயன்படுத்தி விட்டதாக கூறுவது முற்றிலும் தவறானது என்று விளக்கம் அளித்துள்ளார்.












Click it and Unblock the Notifications