Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அயோத்தி கோயில் கும்பாபிஷேகம்.. ராமர் உருவம் பொறித்த சேலையை தயாரித்து அசத்திய பக்தர்கள்!

Subscribe to Oneindia Tamil

லக்னோ: அயோத்தியில் விரைவில் ராமர் கோயில் திறக்கப்பட உள்ள நிலையில், குஜராத்தின் சூரத் நகரிலிருந்து ராமர் படத்துடன் கூடிய சிறப்பு சேலையை பக்தர்கள் தயாரித்து அதனை அயோத்தி ராமர் கோயிலுக்கு அனுப்பி வைத்திருக்கின்றனர்.

உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் ராமர் பிறந்ததாக நம்பப்படுகிறது. இந்நிலையில், அவருக்கான கோயிலை கட்ட கடந்த 2021ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 5ம் தேதியன்று பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டினார். 360 அடி நீளம், 235 அடி அகலம், 161 அடி உயரத்தில், 3 மாடிகள், 5 குவிமாடங்கள், கோபுரம், 360 தூண்கள் என பிரமாண்டமாக ரூ.1,100 கோடியில் கோயில் கட்டப்பட்டிருக்கிறது. இந்த கோயிலில் வரும் 22ம் தேதி குழந்தை ராமர் சிலை வைத்து பிரதிஷ்டை செய்யப்பட இருக்கிறது.

 Devotees sent a special saree with lord Ram image to the Ayodhya temple

22ஆம் தேதி பிற்பகல் 12.29.08 மணிமுதல் 12.30.32 வரை (84 விநாடிகளில்) பிரதிஷ்டை செய்யப்படவுள்ளது. பதினாறு பொருத்தங்களில் 10 பொருத்தங்கள் சிறப்பாக அமைந்துள்ளதால் இக்குறுகிய காலத்தில் பிரதிஷ்டை நடைபெறவுள்ளது என ஸ்ரீ ராமஜென்மபூமி தீா்த்த க்ஷேத்ர அறக்கட்டளை பொதுச் செயலாளர் சம்பத் ராய் கூறியுள்ளார். குழந்தை ராமரின் சிலையின் பீடம் 3 அடி உயரத்தைக் கொண்டது. இச்சிலை மக்ரானா மாா்பிள் கற்களால் செய்யப்பட்டு, அதன் மீது தங்கக் கவசம் பொருத்தப்பட்டுள்ளது.

கோயிலின் கும்பாபிஷேகம், பிரதமர் நரேந்திர மோடி, ஆர்.எஸ்.எஸ்., தலைவர் மோகன் பாகவத், உ.பி., கவர்னர் ஆனந்திபென் படேல், முதல்வர் யோகி ஆதித்யநாத், கோவில் அறக்கட்டளை தலைவர் மஹந்த் நிருத்ய கோபால் தாஸ் ஆகியோர் முன்னிலையில் நடைபெறுகிறது. இந்த நிகழ்வில் நாடு முழுவதும் இருந்து முக்கிய தலைவர்கள், திரை நட்சத்திரங்கள், விளையாட்டு வீரர்கள் பங்கேற்க வைக்க திட்டமிடப்பட்டிருக்கிறது.

 Devotees sent a special saree with lord Ram image to the Ayodhya temple

இந்த கோயிலின் கும்பாபிஷேகம் முடிந்த பின்னர், தினந்தோறும் சுமார் 3 லட்சம் பக்தர்கள் கோயிலுக்கு வந்து செல்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், கோயில் கும்பாபிஷேகத்தை சிறப்பிக்கும் வகையில், குஜராத்தின் சூரத் நகரிலிருந்து ராமர் படத்துடன் கூடிய சிறப்பு சேலையை பக்தர்கள் தயாரித்து அதனை ராமர் கோயிலுக்கு அனுப்பி வைத்திருக்கின்றனர்.

இது குறித்து சூரத் நெசவுத் தொழில் துறையை சேர்ந்த லலித் சர்மா கூறுகையில், "பல ஆண்டுகளுக்கு பிறகு அயோத்தியில் ராமர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட உள்ளதால் நாங்கள் மிகுந்த மகிழ்ச்சியில் இருக்கிறோம். எனவே இந்த மகிழ்ச்சியை பகிர்ந்துக்கொள்ளும் விதாமாக நாங்கள் இந்த சேலையை தயாரித்திருக்கிறோம். சேலையில், அயோத்தி கோயிலும், ராமர் சிலையும் இடம்பிடித்திருக்கின்றன. அயோத்தி கோயிலில் உள்ள ஜானகி தேவிக்கு இந்த சிலை வழங்கப்படும்" என்று கூறியுள்ளார். ராமர் கோயில் கும்பாபிஷேக விழா காரணமாக வடமாநிலங்கள் களைகட்டியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+