பறவை காய்ச்சல் பீதிக்கு மத்தியில்... பறவைகளுக்கு உணவளித்து சர்ச்சையில் சிக்கிய தவான்.!
வாரணாசி: நாடு முழுவதும் பறவை காய்ச்சல் பயமுறுத்தி வரும் நிலையில் இந்திய கிரிக்கெட் வீரர் தவான் படகு சவாரியின்போது பறவைகளுக்கு உணவளித்து சர்ச்சையில் சிக்கியுள்ளார்.
தங்கள் படகுகளில் வரும் சுற்றுலாப் பயணிகளை பறவைகளுக்கு உணவளிக்க அனுமதி கொடுக்கும் படகோட்டிகள் மீது நடவடிக்கை எடுக்கபப்டும் என்று மாவட்ட கலெக்டர் கூறினார்.

நாடு முழுவதும் கொரோனா ஆட்டம் காட்டி வரும் நிலையில் பல்வேறு மாநிலங்களில் பறவை காய்ச்சல் பீதியை ஏற்படுத்தி வருகிறது. நமது அண்டை மாநிலமான கேரளா, சத்தீஸ்கர், அரியானா,மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா, உத்தரகாண்ட், குஜராத், உத்தரப் பிரதேசம் உள்பட 12 மாநிலங்களில் பறவை காய்ச்சல் உறுதியாகி உள்ளது.
பறவை காய்ச்சல் பாதிக்கப்பட்ட பகுதிகளில் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது. பல மாநிங்களில் கோழிகள், பறவைகள் அழிக்கப்பட்டு வருகின்றன. இவ்வாறு பறவை காய்ச்சல் பயமுறுத்தி வரும் நிலையில் இந்திய கிரிக்கெட் வீரர் தவான் பறவைகளுக்கு உணவளித்து சர்ச்சையில் சிக்கியுள்ளார்.

வாரணாசியில் படகு சவாரி செய்த தவான், படகில் இருந்தபடி அங்கு வரும் பறவைகளுக்கு உணவளிக்கிறார். இது தொடர்பாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் படங்களை வெளியிட்ட அவர் ''பறவைகளுக்கு உணவளிப்பது எப்போதும் மகிழ்ச்சியை கொடுக்கும்'' என்று குறிப்பிட்டுள்ளார். பறவை காய்ச்சல் தீவிரமாக பரவி வரும் நிலையில் தவானின் இந்த செயலுக்கு பல்வேறு தரப்பினர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இதுதொடர்பாக மாவட்ட கலெக்டர் கூறுகையில், ''சுற்றுலாப் பயணிகள் பொதுவாக பறவைகளுக்கு உணவளிப்பது தொடர்பான விஷயங்களைப் பற்றி அறிந்திருக்க மாட்டார்கள். சில படகோட்டிகள் நிர்வாகத்தின் அறிவுறுத்தல்களைக் கடைப்பிடிக்கவில்லை. அவர்கள் தங்கள் படகுகளில் வரும் சுற்றுலாப் பயணிகளை பறவைகளுக்கு உணவளிக்க அனுமதி கொடுக்கின்றனர். இனிமேல் இதுபோல் படகோட்டிகள் செயல்பட்டால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கபப்டும். படகு உரிமம் ரத்து செய்யபப்டும் என்றார்.
-
நள்ளிரவில் அமெரிக்கா எடுத்த முக்கியமான முடிவு.. மொத்தமாக சரிந்த தங்கம்.. இனிமேல் இப்படி தான்? -
கரூர் கூட்ட நெரிசலில் எடுக்கப்பட்டதாக சொல்லப்படும் டிரோன் காட்சி முதல்முறையாக வெளியீடு! -
பாகிஸ்தானை விட மோசமான நிலையில் இந்தியா.. உலகின் மகிழ்ச்சியான நாடுகள் ரிப்போர்ட்டில் செம பெரிய ஷாக்! -
170ல் அதிமுக.. பாஜக, பாமக, அமமுக உட்பட கூட்டணி கட்சிக்கு 64 தொகுதிகள்.. எடப்பாடி போட்டுள்ள கணக்கு! -
ஒரு தொகுதிக்குள் சுருங்கிய ஓட்டக்கார தேவர் மகன்.. தனி மரமான ஓ.பன்னீர்செல்வம்! டெபாசிட்டாவது தேறுமா? -
ஆட்டத்தை ஆரம்பிச்சிட்டாரு அமித் ஷா.. எடப்பாடி பழனிசாமிக்கு 165 சீட் தானா? லீக்கானது உத்தேச பட்டியல் -
குடிப்பழக்கத்தை நிறுத்திவிட்டேன்.. பாட்டிலை தொட்டு 6 மாதமாகிவிட்டது.. ஜாலியாக சொன்ன சாஹல்! -
மிஷன் இம்பாசிபிள்.. $400 பில்லியன் 'சூப்பர்மேன்' விமானத்தை வீழ்த்திய.. ஈரானின் சின்ன ஹீட் சென்சார் -
சிறகடிக்க ஆசை: விஜயாவை அசிங்கப்படுத்திய வக்கீல்.. மீனா அருமை இப்போதாவது புரிந்ததே..! முத்து போட்ட அடி -
திண்டுக்கல் கொடை ரோடு விஏஓ சத்யா கனவிலும் நினைக்காதது.. அரசு ஊழியர்கள் அறிய வேண்டிய பாடம் -
மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 50% தாண்டினால் என்ன நடக்கும்? வீட்டு வாடகைப்படியிலும் மாற்றம்? -
அமெரிக்காவால் ஈரானுக்கு தங்க புதையல்.. ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்களுக்கு டோல்கேட்.. பெரிய திட்டம்












Click it and Unblock the Notifications