லலித் மோடிக்காக பிரிட்டன் அரசிடம் பேசவே இல்லை... ராஜ்யசபாவில் 'மனிதாபிமான' சுஷ்மா அந்தர் பல்டி!
டெல்லி: ஐ.பி.எல். முன்னாள் தலைவர் லலித் மோடி வெளிநாடு செல்வதற்கு வசதியாக அவருக்கு விசா வழங்கும்படி பிரிட்டன் அரசிடம் நான் கோரிக்கை எதையும் முன்வைக்கவில்லை; இந்த விவகாரத்தில் என் மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டுகள் அடிப்படை ஆதாரமற்றவை என்று வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் ராஜ்யசபாவில் தெரிவித்தார். இதே சுஷ்மா ஸ்வராஜ் முன்னர் மனிதாபிமான அடிப்படையில்தான் லலித் மோடிக்கு உதவியதாக கூறியிருந்த நிலையில் ராஜ்யசபாவில் அந்தர்பல்டி அடித்துள்ளார்.
இதுகுறித்து ராஜ்யசபாவில் சுஷ்மா பேசியதாவது:
லலித் மோடி விவகாரத்தில், எதிர்க்கட்சிகள் என் மீது சுமத்தும் அனைத்துச் குற்றச்சாட்டுகளுக்கும் சபையில் உரிய விளக்கம் அளிக்கத் தயாராக இருக்கிறேன் என்று நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடரின் முதல் நாளே, ராஜ்யசபா பாஜக தலைவர் அருண் ஜேட்லி மூலம் தெரிவித்தேன்.

இந்த விவகாரம் குறித்து இன்று விளக்கம் அளித்துவிடலாம் என்ற நம்பிக்கையில், கடந்த 2 வாரங்களாக தினமும் அவைக்கு வந்து கொண்டுதான் இருக்கிறேன். லலித் மோடி வெளிநாடு செல்வதற்கு வசதியாக அவருக்கு விசா வழங்கும்படி பிரிட்டன் அரசிடம் நான் கோரிக்கை எதையும் முன்வைக்கவில்லை என்றார்.
ஆனால் அவரது பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், காங்கிரஸ் கட்சியின் உறுப்பினர்கள் சபையின் மையப்பகுதிக்குச் சென்று கடும் அமளியில் ஈடுபட்டனர். இதையடுத்து, சபையின் துணைத் தலைவர் குரியன் நண்பகல் 12 மணி வரை சபை நடவடிக்கைகளை ஒத்தி வைத்தார்.
முன்னதாக, காங்கிரஸ் கட்சியின் எம்.பி. ஆனந்த் சர்மா பேசுகையில், மத்திய அரசின் ஆணவப் போக்கால், சபையை நடத்த முடியாத இக்கட்டான நிலை நீடிக்கிறது. லலித் மோடி விவகாரம், மத்தியப் பிரதேச தொழில் கல்வி தேர்வு வாரிய முறைகேடு விவகாரம் ஆகியவை தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி, உரிய விளக்கம் அளிக்காத வரை, சபை நடைபெற வாய்ப்பில்லை. ஆனால், நாடாளுமன்றம் தொடர்ந்து முடக்கப்படுவது குறித்து மத்திய அரசு கவலை கொள்வதாகத் தெரியவில்லை என்றார்.
அப்போது குறுக்கிட்ட குரியன், குறிப்பிட்ட விவகாரங்கள் தொடர்பான விவாதத்தை நீங்கள் தொடங்காதபட்சத்தில், அவற்றைப் பற்றி பிரதமர் பதிலளிக்க முடியாது' என்றார்.
உடனே, அருண் ஜேட்லி, லலித் மோடி விவகாரம் தொடர்பான விவாதத்தை தொடங்க, காங்கிரஸ் உறுப்பினர்கள் தயாராக இல்லை என்றால், சுஷ்மா ஸ்வராஜ், தன் மீதான குற்றச்சாட்டுகளுக்கு விளக்கம் அளித்து விவாதத்தைத் தொடங்கி வைப்பார்' என்றார்.
ஆனால் இதே சுஷ்மா ஸ்வராஜ் முன்னர், மனிதாபிமான அடிப்படையில்தான் லலித் மோடிக்கு உதவியிருந்ததாக கூறியிருந்தார். தற்போது அப்படியே திடீர் பல்டி அடித்து உதவவே இல்லை எனக் கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications