விவசாயிகள் பிரச்சினைக்காக "7 நாள் உண்ணாவிரதம்" தொடங்கினார் திக்விஜய் சிங்!
போபால்: விவசாயிகள் பிரச்சனை மற்றும் ஊழலுக்கு எதிராக காங்கிரஸ் பொதுச்செயலாளர் திக்விஜய் சிங் இன்று 7 நாள் உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கினார்.
விவசாயிகளுக்கு பயிர் சேத இழப்பீடு வழங்காததைக் கண்டித்தும், மத்திய பிரதேச தேர்வு வாரிய ஊழல் குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்றும் வலியுறுத்தி 7 நாட்கள் உண்ணாவிரதம் இருக்கப்போவதாக திக்விஜய் சிங் அறிவித்திருந்தார்.

அதன்படி குணா நகரில் உள்ள ஆட்சியர் அலுவலகம் அருகில் இன்று உண்ணாவிரதத்தை தொடங்கினார். முன்னதாக திக்விஜய் சிங் தனது ஆதரவாளர்களுடன் மாவட்ட ஆட்சியரை சந்தித்தார்.
அப்போது, தனது கோரிக்கை தொடர்பாக ஏற்கனவே எழுதியிருந்த கடிதத்திற்கு எடுத்த நடவடிக்கைகள் குறித்து ஆட்சியரிடம் கேட்டார். தனது கோரிக்கையை மாவட்ட நிர்வாகம் ஏற்று நடவடிக்கை எடுக்கவில்லை என்றும், முதல்வர் சவுகான் தமது கடிதத்திற்கு ஒரு பதில்கூட அனுப்பவில்லை என்றும் திக்விஜய் சிங் குற்றம் சாட்டினார்.












Click it and Unblock the Notifications