பி.சி.சி.ஐ. தலைவர் பதவியில் இருந்து சீனிவாசன் ராஜினாமா செய்ய வேண்டும்: திக்விஜய்சிங்
டெல்லி: ஐ.பி.எல். போட்டிகளின் போது இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் தலைவராக சுனில் கவாஸ்கரை உச்சநீதிமன்றம் நியமித்துள்ளதைத் தொடர்ந்து என். சீனிவாசன் ராஜினாமா செய்ய வேண்டும் என்று காங்கிரஸ் மூத்த தலைவர் திக்விஜய்சிங் வலியுறுத்தியுள்ளார்.
கடந்த ஐ.பி.எல். போட்டிகளின் போது பிக்ஸிங்கிள் வீரர்களும் நிர்வாகிகளும் ஈடுபட்டதால் கைது செய்யப்பட்டனர். இது தொடர்பான வழக்கில் உச்சநீதிமன்றம் நீதிபதி முத்கல் தலைமையிலான கமிட்டி ஒன்றை அமைத்தது.

நீதிபதி முத்கல் கமிட்டியும் 4 மாத காலம் விசாரணை நடத்தி அறிக்கையை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்தது. பின்னர் ஐ.பி.எல். போட்டிகளின் கிரிக்கெட் வாரியத் தலைவர் பதவியில் சீனிவாசன் நீடிக்கக் கூடாது; இடைக்கால தலைவராக கவாஸ்கர் நியமனம் என அதிரடி உத்தரவுகளைப் பிறப்பித்தது உச்சநீதிமன்றம்.
இது தொடர்பாக கருத்து தெரிவித்த கிரிக்கெட் வாரியத்தின் முன்னாள் செயலர் நிரஞ்சன் ஷா, உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும். இது கிரிக்கெட்டின் நலன் கருதி பிறப்பிக்கப்பட்டிருக்கும் தீர்ப்பு என்றார்.
அதேபோல் முன்னாள் வீரர் சேதன் பகத் கூறுகையில், இன்றைய போட்டியின் ஆட்ட நாயகன் உச்சநீதிமன்ற நீதிபதிதான் என்றார். கிரிக்கெட் வாரிய நிர்வாகி ராஜிவ் சுக்லா கூறுகையில், எந்தத் தரப்பையும் பாதிக்காத தீர்ப்பு இது என்றார்.
சீனிவாசன் ராஜினாமா அவசியம்.. திக்விஜய்சிங்..
இந்த விவகாரம் குறித்து கருத்து தெரிவித்த காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான திக்விஜய்சிங், ஐ.பி.எல். போட்டிகளானது கிரிக்கெட் மற்றும் கிரிக்கெட் வீரர்களுக்கு பலன் தரக்கூடியது.
பிக்ஸிங்கில் ஈடுபடும் வீரர்கள் கண்டிப்பாக தண்டிக்கப்பட வேண்டும். அதற்காக அந்த அணிகளை தண்டிக்கக் கூடாது. கிரிக்கெட் வாரியத் தலைவர் சீனிவாசன் நிச்சயம் ராஜினாமா செய்ய வேண்டும் என்றார்.
-
RCB-க்கு வாழ்த்து சொன்ன டி.கே.சிவகுமார்! வார்னிங் கொடுத்த சித்தராமையா! இந்த முறை தவறு நடக்கக்கூடாது! -
வாள் தூக்கி நின்ற வெங்கடேஷ் ஐயர்.. ப்ளே ஆஃப் வந்தாலே ஆளை கையில் பிடிக்க முடியாது.. இம்பேக்ட் ஆட்டம்! -
நீதான்யா ஸ்பின்னர்.. எகனாமியை பாருங்கப்பா.. ஆர்சிபி வெற்றிக்கு காரணமே க்ருணால் பாண்டியா தான்! -
சோலி முடிஞ்சுது.. சொதப்பிய டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள்.. இனி குஜராத் கதி அவ்வளவு தான்! -
நள்ளிரவில் ஜொலிக்கும் பெங்களூர்.. RCB வெற்றியால் ரசிகர்கள் செய்த சம்பவம்.. இந்த வீடியோ பாருங்க -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு












Click it and Unblock the Notifications