ராகுல் மகாஜனின் மாஜி மனைவி டிம்பி கங்குலிக்கு துபாய் தொழிலதிபருடன் 'திருமணம் நிச்சயமானது'!!
மும்பை: மறைந்த பா.ஜ.க. தலைவர் பிரமோத் மகாஜனின் மகன் ராகுல் மகாஜனின் மாஜி மனைவி டிம்பி கங்குலி தமக்கு திருமணம் நிச்சயமானதாக ட்விட்டரில் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவராகவும் மத்திய அமைச்சராகவும் திகழ்ந்தவர் பிரமோத் மகாஜன். சொத்து தகராறில் தனது சகோதரரால் சுட்டுக் கொலை செய்யப்பட்டார் பிரமோத் மகாஜன்.
அவரது மகன் ராகுல் மகாஜன், 2006ஆம் ஆண்டு தன்னுடைய தோழி சுவேதாசிங்கை திருமணம் செய்து கொண்டார். ஆனால் 2 ஆண்டுகளில் விவகாரத்தில் இந்த திருமணம் முடிந்தது.
அதன் பின்னர் பிக் பாஸ் 2 என்ற டிவி ரியாலிட்டி ஷோ மூலம் ராகுல் மகாஜன் பிரபலமடைந்தார். பின்னர் டி.வி. ஒன்றில் சுயம்வரம் நிகழ்ச்சியில் வங்க நடிகையும் மாடல் அழகியுமான டிம்பி கங்குலியை 2010ஆம் ஆண்டு ராகுல் மகாஜன் திருமணம் செய்து கொண்டார்.
Thank you @TheRahulMahajan ! I wish you the same :) https://t.co/cNG9PNtePb
— Dimpy Ganguly (@iamdimpyganguly) October 14, 2015
ஆனால் சில மாதங்களிலேயே ராகுல் மகாஜன் தம்மை கொடுமைப்படுத்துவதாக புகார் தெரிவித்திருந்தார். இதனால் இருவரும் தனித்தனியே வசித்து வந்தனர். அதன் பின்னர் பிக் பாஸ் 8 ரியாலிட்டி ஷோவில் இருவரும் இணைந்து பங்கேற்றனர். கடந்த பிப்ரவரி மாதம் இருவருக்கும் விவாகரத்தாகிவிட்டதாக ராகுல் மகாஜன் தமது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.
இந்நிலையில் டிம்பி கங்குலி தமது ட்விட்டர் பக்கத்தில் தமக்கு திருமணம் நிச்சயமாகிவிட்டதாக அறிவித்துள்ளார். துபாயைச் சேர்ந்த தொழிலதிபர் ரோகித் ராயை டிம்பிள் கங்குலி திருமணம் செய்து கொள்ள இருக்கிறார்.
#engaged pic.twitter.com/3ofJaCDHBO
— Dimpy Ganguly (@iamdimpyganguly) October 13, 2015
டிம்பி கங்குலியின் இந்த அறிவிப்பைத் தொடர்ந்து அவருக்கு ஏராளமான பிரபலங்கள் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்..அவர்களில் மாஜி கணவர் ராகுல் மகாஜனும் ஒருவர்!