ஜெகஜ்ஜால ஜெயா டிவி ஜனாவிடம் சிக்கிய பாஸ்வேர்டுகள்... திகிலில் தினகரன்!
டெல்லி: தம்மை போட்டுக் கொடுத்த ஜெயா டிவி ஜனாவிடம்தான் இருக்கும் முக்கிய பாஸ்வேர்டுகள் போலீஸ் கைக்கு போயிருக்குமோ என பீதியில் உறைந்து போயுள்ளாராம் டிடிவி தினகரன்.
ஜெயலலிதா 2011-ம் ஆண்டு ஜெயா டிவி ஊழியர்களுக்கு பணப் பரிசு அறிவித்திருந்தார். அதில் ரூ3 கோடியை சுட்டவர் தினகரனுக்கு எல்லாமுமாக இருந்த ஜனா.
இது தொடர்பாக ஜெயலலிதா விசாரணை நடத்தினார். அப்போது தினகரன் மனைவி அனுராதான் ரூ3 கோடியை சுட்டவர் என போட்டுக் கொடுத்தார் ஜனா. அப்போது தினகரன் அண்ட் கோவை ஜெயலலிதா விரட்டிவிட இதுவும் ஒரு காரணமாக கூறப்பட்டது.
ஜனாதான் காரணமாம்
இருந்தபோதும் ஜனாவை உதவியாளராகவே தினகரன் குடும்பம் வைத்துக் கொண்டது. இப்போது டிடிவி தினகரன், தேர்தல் ஆணையத்துக்கு லஞ்சம் கொடுத்த வழக்கில் சிக்குவதற்கும் ஜனாதான் காரணம் என கூறப்படுகிறது.
அப்ரூவர்...
ஜனாவை முதலில் விசாரித்தது டெல்லி போலீஸ். இந்த விசாரணையின் போது தினகரன் தொடர்பான அத்தனை தகவல்களையும் கொட்டிவிட்டார் ஜனா. அவர் அப்ரூவர் ஆனதால் அவரை கைது செய்யவில்லை.
தனித்தனியே
அதேநேரத்தில் ஜனாவின் உறவினரும் தினகரனின் கூட்டாளியுமான மல்லி என்ற மல்லிகார்ஜூனாவும் தினகரனுடன் சிக்கினார். இப்போது திஹார் சிறையின் 7-வது பிளாக்கில் அடைக்கப்பட்டுள்ளார் தினகரன்.
புலம்பிய தினகரன்
மல்லிகார்ஜூனா வேறு ஒரு அறையில் அடைக்கப்பட்டுள்ளார். இருவரையும் ஒரே அறையில் அடைக்க அனுமதி கோரியும் அது கிடைக்கவில்லை. திஹார் சிறையில் நேற்று இரவு உணவு நேரத்தின் போது, உங்க ஆள் இப்படி போட்டுக் கொடுப்பான் என நினைச்சு கூட பார்க்கலை.. அந்த 3 பாஸ்வேர்டுகளை போலீசிடம் கொடுக்காம இருந்தாலே போதும் என நொந்து போய் கூறினாராம்.