ஸ்ரீநகரில் 25 வெளிநாடுகளின் தூதர்கள் குழு- காஷ்மீர் நிலவரம் குறித்து ஆய்வு
ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீர் நிலவரம் குறித்து ஆராய 25 வெளிநாடுகளின் தூதர்கள் குழு இன்று ஸ்ரீநகர் சென்றுள்ளனர்.
ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கப்பட்ட அரசியல் சாசனத்தின் 370-வது பிரிவை மத்திய அரசு கடந்த ஆண்டு ஆகஸ்ட் 5-ந் தேதி ரத்து செய்தது. மேலும் ஜம்மு காஷ்மீர் இரண்டு யூனியன் பிரதேசங்களாகப் பிரிக்கப்பட்டன.

அம்மாநிலத்தின் முன்னாள் முதல்வர்கள் பரூக் அப்துல்லா, உமர் அப்துல்லா, மெகபூபா முப்தி உள்ளிட்ட ஆயிரக்கணக்கானோர் வீட்டு காவல்களிலும் சிறைகளிலும் அடைக்கப்பட்டனர். இவர்களில் ஒரு பகுதியினர் மட்டும் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் அண்மையில் இந்தியாவுக்கான வெளிநாடுகளின் தூதர்கள் குழு ஒன்று ஜம்மு காஷ்மீருக்கு பயணம் மேற்கொண்டது. அங்கு மக்கள் பிரதிநிதிகள், ராணுவத்தினர் உள்ளிட்டோரை சந்தித்து நிலவரங்களை விசாரித்தது.
இதனைத் தொடர்ந்து இன்று 25 நாடுகளைச் சேர்ந்த 2-வது தூதர்கள் குழு ஸ்ரீநகர் சென்றுள்ளது. இதில் கனடா, ஆஸ்திரியா, உஸ்பெகிஸ்தான், உகாண்டா, ஸ்லோவேகியா குடியரசு, நெதர்லாந்து, நமீபியா, கிரிகிஸ் , பல்கேரியா, ஜெர்மனி, தஜிகிஸ்தான், பிரான்ஸ், மெக்சிகோ,டென்மார்க், இத்தாலி, ஆப்கானிஸ்தான், நியூஸிலாந்து, போலந்து மற்றும் ருவாண்டா நாடுகளின் பிரதிநிதிகள் இடம்பெற்றுள்ளனர்.
முதல் கட்ட தூதர் குழுவில் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் தூதர்கள் பங்கேற்கவில்லை. இதன் பின்னர் ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்றத்தில் காஷ்மீர் விவகாரம். சி.ஏ.ஏ. ஆகியவை தொடர்பாக எம்.பி.க்கள் தீர்மானம் கொண்டு வந்தனர்.
இந்நிலையில் ஸ்ரீநகரில் பத்திரிகையாளர்கள், பழ உற்பத்தியாளர்கள், மக்கள் இயக்க பிரதிநிதிகள் ஆகியோரை இந்த குழு சந்தித்து நிலவரங்களை கேட்டறியும். இதனைத் தொடர்ந்து ஜம்மு காஷ்மீர் துணை நிலை ஆளுநர் முர்முவையும் வெளிநாடு தூதர்கள் குழு சந்திக்கும்.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications