2 லட்சம் பிணைத் தொகையில் ஜெகன்மோகன் ரெட்டிக்கு ஜாமீன்
Subscribe to Oneindia Tamil

2012ம் ஆண்டு மே 27ம் தேதி சொத்துக் குவிப்பு வழக்கில் சிபிஐயால் கைது செய்யப்பட்டார் ரெட்டி என்பது நினைவிருக்கலாம்.
இன்றுதான் அவருக்கு உச்சநீதிமன்றம் ஜாமீன் அளித்தது. ரூ. 2 லட்சம் பிணைத் தொகை செலுத்தி அவருக்கு ஜாமீன் அளிக்கலாம் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்ட பின்னர் ஜெகன் மோகனுக்கு ஜாமீன் அளிப்பது குறித்து பரிசீலிக்கப்படும் என்று முன்னதாக உச்சநீதிமன்றம் கூறியிருந்தது நினைவிருக்கலாம். சமீபத்தில்தான் ரெட்டி மீதான குற்றப்பத்திரிக்கையை சிபிஐ தாக்கல் செய்தது. இதையடுத்து தற்போது ஜாமீன் கிடைத்துள்ளது.
ஜெகனுக்கு ஜாமீன் கிடைத்ததைத் தொடர்ந்து அவரது ஆதரவாளர்கள் பட்டாசு வெடித்துக் கொண்டாடினர்.












Click it and Unblock the Notifications