கழற்றிவிடப்பட்ட காங்.. திடீரென மோடியை சந்தித்து பேசிய மம்தா! கவனிக்கும் ‛இந்தியா’ கூட்டணி.. பின்னணி
கொல்கத்தா: கொல்கத்தாவில் இன்று பிரதமர் மோடியை, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி திடீரென்று சந்தித்து பேசினார். விரைவில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் மாநிலத்தில் காங்கிரஸ் உடன் கூட்டணி இல்லை என மம்தா பானர்ஜி அறிவித்துள்ள நிலையில் இந்த சந்திப்பு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதற்கிடையே தான் சந்திப்பு குறித்து மம்தா பானர்ஜி விளக்கமளித்துள்ளார்.
மேற்கு வங்க மாநிலத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் ஆட்சி நடக்கிறது. அந்த கட்சியின் தலைவரான மம்தா பானர்ஜி முதல்வராக செயல்பட்டு வருகிறார். விரைவில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் பாஜகவை வீழ்த்த வேண்டும் என்ற எண்ணத்தில் மம்தா பானர்ஜி உறுதியாக உள்ளார்.

இதனால் அவர் எதிர்க்கட்சிகளின் ‛இந்தியா' கூட்டணியில் இணைந்தார். இந்த கூட்டணிக்கு ‛இந்தியா' என்ற பெயரையே மம்தா பானர்ஜி தான் பரிந்துரை செய்தார். ஆனாலும் மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள காங்கிரஸ் தலைவர்கள் மற்றும் மம்தா பானர்ஜி இடையே கருத்து வேறுபாடு நிலவி வருகிறது.
இதனால் ‛இந்தியா' கூட்டணியில் இருந்தாலும் கூட மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள அனைத்து நாடாளுமன்ற தொகுதிகளிலும் தனித்து தான் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி போட்டியிடும். காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி என்பது இல்லை என மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார். இதனால் மேற்கு வங்க மாநிலத்தில் வரும் நாடாளுமன்ற தேர்தலில் மும்முனை போட்டி நிலவ உள்ளது. அதாவது திரிணாமுல் காங்கிரஸ், பாஜக, மற்றும் காங்கிரஸ் + கம்யூனிஸ்ட் கட்சிகள் என மும்முனை போட்டி நிலவ உள்ளது.
இத்தகைய சூழலில் தான் இன்று திடீரென்று பிரதமர் மோடியை, மம்தா பானர்ஜி சந்தித்து பேசியுள்ளார். பிரதமர் மோடி மேற்கு வங்க மாநிலத்தில் 2 நாள் சுற்றுப்பயணம் செய்துள்ளார். அவர் இன்று மாலையில் கொல்கத்தாவில் உள்ள ஆளுநர் மாளிகையில் ஓய்வெடுத்தார். இந்த வேளையில் முதல்வர் மம்தா பானர்ஜி, பிரதமர் மோடியை சந்தித்தார். இது அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
ஏனென்றால் பிரதமர் மோடி இன்றைய பொதுக்கூட்டத்தில் சந்தேகாலி வன்முறையை சுட்டிக்காட்டி மம்தா பானர்ஜியை கடுமையாக விமர்சனம் செய்தார். மேலும் சந்தேகாலி பிரச்சனைக்கு காரணமானவரும், நிலஅபகரிப்பு, பாலியல் புகாரில் சிக்கிய திரிணாமுல் காங்கிரஸ் நிர்வாகி ஷாஜகானை கைது செய்யக்கோரி பாஜகவினர் தொடர்ந்து போராட்டம் நடத்தினர். இத்தகைய சூழலில் இந்த சந்திப்பு என்பது பலருக்கும் புரியாத புதிராக அனைவரின் புருவத்தையும் உயர்த்தியது.
இந்த சந்திப்புக்கு பிறகு மம்தா பானர்ஜி பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது பிரதமர் மோடியை சந்தித்து ஏன்? என்று அவரிடம் கேள்வி கேட்டனர். அதற்கு மம்தா பானர்ஜி விளக்கமளித்தார். இதுபற்றி அவர் கூறுகையில், ‛‛மாநில பிரச்சனைகளை பிரதமர் மோடியிடம் எடுத்து கூறினேன். இது ஒரு மரியாதை நிமித்தமான சந்திப்பு. அதோடு மாநிலத்துக்கு ஜனாதிபதி, பிரதமர் வந்தால் முதல்வராக இருப்பவர் சந்தித்து வரவேற்பது மரபாக உள்ளது. அதன்படி தான் இந்த சந்திப்பு நிகழ்ந்துள்ளது. இதில் அரசியல் பேசவில்லை. அரசியலுக்கு அப்பாற்பட்ட சந்திப்பாக இது அமைந்தது'' என்றார்.
-
மோடியை மடக்கிய ஸ்டாலின்.. எங்களைக் காக்கப் பிரதமர் தயாரா? தேதி வாரியாக பட்டியல் போட்டு விளாசல்! -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு?












Click it and Unblock the Notifications