பெண்ணின் பித்தப் பையில் எடுக்க எடுக்க கற்கள்.. தும்கூரில் பரபரப்பை ஏற்படுத்திய ஆபரேஷன்!
Recommended Video

தும்கூர்: கர்நாடக மாநிலம் தும்கூரில் ஒரு பெண்ணின் பித்தப் பையிலிருந்து 99 கற்களை டாக்டர்கள் அறுவைச் சிகிச்சை மூலம் அகற்றினர். கடும் வயிற்று வலியால் துடித்த அவர் தற்போது நிம்மதி அடைந்துள்ளார்.
ராஜேஸ்வரி (பெயர் மாற்றப்பட்டது) கடும் வயிற்று வலியால் துடித்து வந்தார். அவரது கணவர் ஒரு கூலித் தொழிலாளி. மனைவியை அவர் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று காட்டினார். டாக்டர்கள் ஸ்கேன் செய்து பார்த்தபோது ராஜேஸ்வரியின் பித்தைப் பையில் கற்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து தும்கூர் மாவட்ட அரசு மருத்துவமனையில் நேற்று ராஜேஸ்வரிக்கு அறுவைச் சிகிச்சை செய்யப்பட்டது. கிட்டத்தட்ட இரண்டரை மணி நேரம் அறுவைச் சிகிச்சை நடைபெற்றது. இந்த அறுவைச் சிகிச்சையின்போது மொத்தம் 99 கற்களை டாக்டர்கள் எடுத்தனர்.
இதுகுறித்து மருத்துவமனை தலைமை அறுவைச் சிகிச்சை நிபுணர் டாக்டர் வாசிம் இம்ரான் கூறுகையில், இது சவால்கள் நிறைந்த அறுவைச் சிகிச்சையாக மாறி விட்டது. அவருக்கு ஹெர்னியா பிரச்சினை இருந்தது. பித்தப் பை கல் ஒருபக்கம். சர்க்கரை வியாதியும் உள்ளது. பிபி உள்ளது. உடல் பருமனாலும் அவர் அவதிப்பட்டு வந்துள்ளார். இதயப் பிரச்சினையும் இருக்கிறது.
பல்வேறு உடல் உபாதைகளால் அவர் அவதிப்பட்டாலும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை செய்யக் கூடிய அளவுக்கு வசதி இல்லாமல் சிரமப்பட்டுள்ளனர். இது பல சிக்கல்களுக்கு வித்திட்டு விட்டது.

இருப்பினும் எங்களது டாக்டர்கள் குழுவின் திறமையாலும், சாதுரியத்தாலும் பித்தப் பை கற்கள் முழுமையாக அகற்றப்பட்டு விட்டது. குடல் வாலும் நீக்கப்பட்டு விட்டது. அவரது பித்தைப் பையில் இருந்த கற்களில் 3 கற்கள் சுமார் 12 மில்லிமீட்டர் அளவுக்குப் பெரிதாக இருந்தது. மற்றவை 4 முதல் 5 மில்லிமீட்டர் அளவிலானவை என்றார்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications