காஷ்மீரில் சர்வதேச யோகா தினத்தில் அசத்திய ராணுவத்தின் மோப்ப நாய்கள்
Recommended Video
ஶ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு எல்லைப் பாதுகாப்பு படையினருடன் இணைந்து மோப்ப நாய்களும் யோகாசனங்களை செய்தது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது.
5-வது சர்வதேச யோகா தினம் உலகம் முழுவதும் கடைபிடிக்கப்படுகிறது. காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை அனைத்து மாநிலங்களும் காலையில் சர்வதேச யோகா தின நிகழ்ச்சிகள் நடைபெற்றன,
ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் பிரதமர் மோடி பங்கேற்று நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். பின்னர் யோகாசனங்களை செய்தார்.
5-வது சர்வதேச யோகா தினம்.. ராஞ்சியில் பிரதமர் மோடி பங்கேற்பு
மேலும் முப்படையினரும் கடும் உறைபனியையும் கூட பொருட்படுத்தாமல் யோகா நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றனர். ஜம்மு காஷ்மீரில் எல்லை பாதுகாப்புப் படையினர் பங்கேற்ற சர்வதேச யோகா தின நிகழ்ச்சி நடைபெற்றது.
#WATCH Dog squad of Border Security Force performs yoga along with their trainers on #YogaDay2019 in Jammu. pic.twitter.com/TTN2vAgbeS
— ANI (@ANI) June 21, 2019
ஜம்மு நகரில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் பாதுகாப்புப் படையினரின் மோப்ப நாய்களும் பங்கேற்றன. ராணுவ வீரர்கள் செய்த அத்தனை யோகாசனங்களையும் அச்சு பிசாகமல் செய்து அனைவரது பாராட்டுதல்களையும் மோப்ப நாய்கள் பெற்றன.
குதிரை மீது யோகாசனம்
#Haryana: Border Security Force's equestrian team performs Yoga on horsebacks at the BSF camp in Gurugram. pic.twitter.com/Vp7ytXqDRg
— ANI (@ANI) June 21, 2019
ஹரியானாவின் குருகிராமில் எல்லை பாதுகாப்புப் படையினர் குதிரையின் முதுகில் ஏறி நின்றும் அமர்ந்தும் படுத்தும் யோகாசனங்களை செய்து காட்டி அசத்தினர்..
#InternationalDayofYoga : Navy personnel perform Yoga on submarine INS Sindhudhvaj. pic.twitter.com/ZLUSTDe5AR
— ANI (@ANI) June 21, 2019
நீர்மூழ்கிக் கப்பல் மீது யோகா
கடற்படை வீரர்கள், ஐ.என்.எஸ். சிந்துஜா நீர்மூழ்கிக் கப்பலின் மீது சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு யோகாசனங்களை செய்தனர்.