உள்நாட்டு விமான பயணிகளுக்கு செக் வைத்த டெல்லி ஹைகோர்ட் தீர்ப்பு!
உள்நாட்டு விமானத்தில் 15 கிலோவிற்கு மேல் லக்கேஜ் எடுத்துச் சென்றால் கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டிய சூழல் உருவாகியுள்ளது.
டெல்லி: உள்நாட்டு விமான பயணத்தின் போது, 15 கிலோவிற்கு மேல் உடைமைகளை எடுத்து சென்றால் கூடுதல் கட்டணம் கட்ட வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
தொழில் ரீதியாகவும், விடுமுறை காலங்களுக்கு வந்து செல்லவும் பலர் உள்நாட்டு விமானங்களை பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் உள்நாட்டு பயணிகளுக்கு டெல்லி உயர்நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பு அதிர்ச்சியை தருவதாக அமைந்துள்ளதோடு வாடிக்கையாளர்களின் பணச்சுமையையும் அதிகரிக்கும் சூழல் உருவாகியுள்ளது.

தனியார் நிறுவன விமானங்களில், உள்நாட்டு பயணம் மேற்கொள்ளும் போது, 15 கிலோ வரையிலான உடைமைகளுக்கு எந்த கட்டணமும் வசூலிக்கப்படவில்லை. ஆனால், பொதுத்துறையை சேர்ந்த ஏர் இந்தியா நிறுவனம், 23 கிலோ வரை கட்டணத்தை வசூலிப்பதில்லை என்று இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் அறிவித்தது.
ஆனால் 15 கிலோவிற்கு மேல் கொண்டு செல்லப்படும் உடைமைகளுக்கு, தனியார் ஏர்லைன்ஸ்கள் தலா ஒரு கிலோவிற்கு, ரூ. 350 ரூபாய் வரை கட்டணம் வசூலித்தன. இது குறித்து ஏராளமான புகார்கள் வந்ததால் விமான போக்குவரத்து இயக்குனரக ஜெனரல் அலுவலகம், 2016 ஜூன், 10ம் தேதி ஒரு அறிவிப்பை வெளியிட்டது.
அதன்படி, 15 முதல் 20 கிலோ வரையிலான உடைமைகளுக்கு, தலா ஒரு கிலோவிற்கு, ரூ.100க்கு மேல் கட்டணம் வசூலிக்க கூடாது என்று உத்தரவிடப்பட்டது. விமான போக்குவரத்து இயக்குனரகத்தின் முடிவை எதிர்த்து இண்டிகோ, கோ ஏர், ஸ்பைஸ்ஜெட் உள்ளிட்ட தனியார் விமான நிறுவனங்கள் இடம் பெற்றுள்ள இந்தியன் ஏர்லைன்ஸ் கூட்டமைப்பு சார்பில், டெல்லி ஹைகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்னை விசாரித்து உத்தரவிட்ட டெல்லி உயர்நீதிமன்றம் கட்டண நிர்ணயம் தொடர்பாக விமான போக்குவரத்து இயக்குனரக ஜெனரல் பிறப்பித்த உத்தரவு ரத்து செய்தது. இதன் மூலம், உள்நாட்டு பயணத்தின் போது, 15 கிலோவிற்கு மேல் உடைமைகள் கொண்டு செல்லும் போது கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டிய நிலைமை உருவாகி உள்ளது.
-
தெரிந்தே இப்படி செய்யலாமா? அருண் ஐபிஎஸ்ஸை கண்டித்த ஹைகோர்ட்! தொழிலதிபர் மீதான குண்டர் சட்டம் ரத்து -
கடவுள் முன் அனைவரும் சமம் எனும்போது விஐபி தரிசனம் ஏன்? தமிழ்நாடு அரசுக்கு சென்னை ஐகோர்ட் கேள்வி! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல்












Click it and Unblock the Notifications