பதவி கேட்டு அணத்தக் கூடாது.. பாஜக எம்.பிக்களுக்கு மோடி கண்டிப்பு
டெல்லி: அமைச்சர் பதவி கேட்டு லாபி செய்வதை பாஜக எம்.பிக்கள் கைவிட வேண்டும் என்று பிரதமராகப் பதவியேற்கவுள்ள நரேந்திர மோடி கண்டிப்புடன் கூறியுள்ளார்.
அமைச்சர் பதவி கேட்டு மோடியைப் பார்க்க பலரும் டெல்லியில் குவிந்து வருகின்றனர். மேலும் பல்வேரு ரூபத்திலும் அவர்கள் லாபி செய்து வருகின்றனர். இதனால் மோடி அப்செடாக்கியுள்ளார்.

ஞாயிற்றுக்கிழமை கூட அவரைப் பார்க்க கர்நாடகத்திலிருந்து எதியூரப்பா, அனந்தகுமார் தலைமையில் ஆளுக்கு ஒரு கோஷ்டி வந்து மோடியைப் பார்த்தது. அவர்களின் கோரிக்கையைக் கேட்ட மோடி கடுப்பாகி, இப்படியெல்லாம் லாபி செய்வது எனக்குப் பிடிக்காது. இதை நான் ரசிக்கவில்லை என்று முகத்தில் அடித்தாற் போல கூறி விட்டாராம்.
இப்படி லாபி செய்வதற்குப் பதில் கட்சியை முன்னேற்றுவது குறித்து ஆக்கப்பூர்வமாக சிந்திக்குமாறும் கூறினாராம் மோடி.
ஆனால் மோடி இப்படிக் கூறியும் கூட பலர் தொடர்ந்து பதவிக்காக லாபி செய்தபடிதான் உள்ளனராம்.
தற்போது பாஜகவினரை விட கூட்டணிக் கட்சிகள்தான் பதவிக்காக அலைமோதியபடி உள்ளனராம். வழக்கமாக கூட்டணி ஆட்சி அமைவதாக இருந்தால் பெரிய கட்சிதான் சின்னக் கட்சியைக் கூட வலியக்கப் போய் கூப்பிட்டு பதவி தரும். ஆனால் தற்போது, பாஜக தனிப்பெரும்மையுடன் ஆட்சியமைப்பதால், யாரையுமே அது சீண்டவில்லை. இதனால்தான் பல கட்சிகளும் பாஜகவைத் தேடி ஓடி வந்தவண்ணம் உள்ளன.












Click it and Unblock the Notifications