எதிர்பாராத தீர்ப்பு இது... மக்கள் அமைதி காக்க வேண்டும்: சதானந்த கவுடா
பெங்களூரு : எதிர்பாராத தீர்ப்பு இது... காவிரி விவகாரத்தில் மக்கள் உணர்ச்சி வசப்படுவது இயல்பானது. ஆனால், மக்கள் அமைதிகாக்க வேண்டும் என்று மத்திய அமைச்சர் சதானந்த கவுடா கோரிக்கை விடுத்துள்ளார்.
காவிரி நீர் விவகாரத்தில் கர்நாடக அரசு தாக்கல் செய்த மேல் முறையீட்டு மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம் செப்டம்பர் 20ம் தேதி வரை தினமும் 12,000 கன அடி தண்ணீர் திறக்க வேண்டும் என்று நேற்று உத்தரவு பிறப்பித்தது. இதனையடுத்து கர்நாடகாவில் போராட்டம் மற்றும் வன்முறை சம்பவங்கள் அரங்கேறி வருகிறது.

உச்ச நீதிமன்ற உத்தரவினை ஏற்று தமிழகத்திற்கு காவிரி நீர் திறந்துவிடப்பட்டதை எதிர்த்து கர்நாடகாவில் தொடர்ந்து போராட்டங்கள் நடைபெறுகின்றன. இதனை உச்ச நீதிமன்றம் கண்டித்துள்ள நிலையில், கர்நாடக மாநிலத்தை சேர்ந்த பாஜக மத்திய அமைச்சர் சதானந்த கவுடா, நேற்று செய்தியாளர்களிடம் பேசினார்.
உச்சநீதிமன்றத்தில் இருந்து இதுபோன்ற தீர்ப்பை கர்நாடக மக்கள் எதிர்பார்க்கவில்லை. காவிரி நீர்பிடிப்பு பகுதிக்கு உச்ச நீதிமன்றம் ஒரு குழுவை அனுப்பி, நீர்த்தேங்கங்களில் உள்ள நிலைமைகளை ஆய்வு செய்யும் என்றும், அவர்களிடம் இருந்து தகவல்களை பெற்ற பின்னர் முடிவுக்குவரும் என்றும் நினைத்தோம். ஆனால் அது நடைபெறவில்லை.
இதுபோன்ற நிலையில் மக்கள் உணர்ச்சி வசப்படுவது இயல்பானது. ஆனால், மக்கள் அமைதிகாக்க வேண்டும் என்று நான் கோரிக்கை விடுக்கின்றேன், சட்டம் ஒழுங்கு பராமரிக்கப்படவேண்டும் என்று கூறியுள்ளார். காவிரி விவகாரத்தை யாரும் அரசியலாக்க வேண்டாம் என்றும் சதானந்த கவுடா கோரிக்கை விடுத்துள்ளார்.
-
2020ல் ஒரு கோடிக்கு 'இதை' வாங்கியிருந்தால் இன்று 75 கோடி லாபம்.. எஸ்பிஐயில் 6 கோடி.. தங்கம் 4 கோடி -
எடப்பாடி பழனிசாமி மீது அதிருப்தி! திமுகவில் இணைந்த முன்னாள் எம்எல்ஏ இளையக்கண்ணு! -
தமிழ்நாட்டின் ஹிட்லர்.. மனைவி, மகளை விரட்டிவிட்டு மகளிர் தின விழாவா! விஜய்யை சாடிய இயக்குநர் அமீர் -
ஸ்டாலின் காதுக்கு எட்டிய பெயர்.. உளவுத்துறைக்கு உடனே உத்தரவு.. சென்னை சுவரில் தோன்றிய நாடார் சங்கம் -
NDA கூட்டணியில் தவெக? துணை முதல்வராகிறாரா விஜய்? சாணக்கியத்தனத்தை சொல்லி கொடுத்த பிரபல நடிகர் -
வீட்டுப் பெண்களை நினைக்காமல் அவதூறு பரப்பி.. தவெக நிகழ்ச்சியில் பேசிய பெண்! ஒரு நொடி முகம் மாறிய விஜய் -
இந்தியாவுக்கு ஆப்பு வைக்கும் ரஷ்யா.. கச்சா எண்ணெய் விலையில் இனி சலுகை இல்லை? நேரம் பார்த்து அடிக்கும் புதின் -
Sani Peyarchi: விருச்சிக ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. இனி பொற்காலம் ஆரம்பம் -
விஜய்க்கு தான் பிரச்சனை! அடுத்த அடி, அதிரடி காட்டும் மகன் ஜேசன் சஞ்சீவ்! இதுதான் கெத்து.. குவியும் பாராட்டு -
“OPS சிரிப்பே அவருக்கு பிரச்சனை”.. ஸ்டாலின் பேச பேச.. மேடையிலேயே குலுங்கி குலுங்கி சிரித்த ஓபிஎஸ்! -
போரில் ‘என்ட்ரி'யான ரஷ்யா.. அரபு நாடுகளை ஈரான் தாக்கியது எப்படி? டிரம்பை கதறவிடும் புதின்! -
தங்கப் பத்திரம் சேமிப்பு திட்டத்தில் ரிசர்வ் வங்கி ஜாக்பாட்.. ₹1 லட்சம் போட்டால் ₹3.48 லட்சம் லாபமா?












Click it and Unblock the Notifications