ஸ்டெர்லைட்டின் வேதாந்தா ஆலையை வீரம் செறிந்த யுத்தத்தால் விரட்டிய ஒடிஷா ஆதிதிராவிட பழங்குடிகள்
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை நிறுவிய வேதாந்தா குழுமத்தின் பாக்சைட் தொழிற்சாலையை இடைவிடாத போராட்டத்தால் விரட்டியடித்தனர் ஒடிஷா ஆதி குடிகள்.
Recommended Video

லாஞ்ஜிகர்: ஸ்டெர்லைட் நிறுவனத்தை நடத்தி வரும் வேதாந்தா குழுமத்துக்கு சொந்தமான பாக்சைட் தொழிற்சாலையை சட்டப் போராட்டங்களாலும் மக்கள் திரள் போராட்டங்களாலும் விரட்டி அடித்தனர் ஒடிஷாவின் ஆதிகுடிகளான டோங்கிரியா கோண்டுகள்.
ஒடிஷாவின் நியாம்கிரி மலைத் தொடர் 40 கிலோ மீட்டர் தொலைவுக்கு விரிந்து பரந்து கிடக்கிறது. இம்மலையில் கொட்டிக் கிடக்கும் பாக்சைட் தாதுவை வெட்டி எடுக்க வேட்டைக் களம் அமைத்தது வேதாந்தா குழுமம்.
பல்லாயிரம் ஆண்டுகளாக இம்மலைத் தொடரில் வாழ்ந்து வந்த டோங்கிரியா கோண்டுகளை அவர்களின் வாழ்விடங்களில் இருந்து வெளியேற்றி மலை அடிவாரத்தில் வேதாந்தா கட்டிக் கொடுத்த 'முகாம்களில்' அடைக்கப்பட்டனர். ஆனாலும் ஒட்டுமொத்த டோங்கிரியா கோண்டுகளை வேதாந்தா குழுமத்தால் வெளியேற்ற முடியவில்லை.

சட்ட யுத்தம், மக்கள் போராட்டம்
வேதாந்தா குழுமத்துக்கு எதிராக 12 ஆண்டுகாலம் இடை விடாத சட்ட யுத்தம் நடத்தினர். மத்திய, மாநில அரசுகளை அதிரவைக்கும் மக்கள் திரள் போராட்டங்களை முன்னெடுத்தனர் டோங்கிரியா கோண்டுகள். வெளியாட்கள் எவர் நுழைந்தாலும் வேதாந்தா குழுமத்தின் அடியாட்கள் என விரட்டி விரட்டி அடித்தனர் டோங்கிரியா கோண்டுகள்.

திணறிய வேதாந்தா
இதனால் வேதாந்தா குழுமத்தால் பாக்சைட் தாதுவை நியாம்கிரியில் இருந்து வெட்டி எடுக்க முடியாமல் போனது. இந்த ஆலையை நடத்துவதற்காக ஜார்க்கண்ட், குஜராத் மாநிலங்களில் இருந்து மூலப் பொருட்கள் கொண்டு வரப்பட்டன. ஆனால் ஒட்டுமொத்த டோங்கிரியா கோண்டு கிராமசபைகளின் இடைவிடாத எதிர்ப்பு உக்கிரத்தைக் காட்டியது.

திராவிட ஆதி குடிகள்
இதையடுத்து வேறுவழியே இல்லாமல் லாஞ்ஜிகர் வேதாந்தா பாக்சைட் தொழிற்சாலை இழுத்து மூடப்பட்டது. டோங்கிரியா கோண்டு மக்களை மாவோயிஸ்டுகள் என முத்திரை குத்தி அரச பயங்கரவாதம் கட்டவிழ்த்துவிடப்பட்ட போதும் தாய் நிலத்தைக் காக்க தீரமுடன் போராடி வெற்றிக் கொடி நாட்டியவர்கள் 'திராவிட பழங்குடியினராகிய' டோங்கிரியா கோண்டுகள். இவர்கள் பேசுவது திராவிட மொழிக் குடும்பத்தைச் சேர்ந்தது. நம்மால் எளிதாக புரிந்து கொள்ளக் கூடியதுதான்.

ஸ்டெர்லைட்டுக்கு எதிரான போராட்டம்
இதேவழியில்தான் வேதாந்தா குழுமத்தின் ஸ்டெர்லைட் தொழிற்சாலையை இழுத்து மூட பிஞ்சு குழந்தைகளும் இப்போது தூத்துக்குடி களத்தில்... ஜல்லிக்கட்டுக்காக கிளர்ந்தெழுந்த தமிழகம் இப்போது ஸ்டெர்லைட் தொழிற்சாலைக்கு எதிராக போர்க்கோலம் பூண்டிருக்கிறது!
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications